tag:blogger.com,1999:blog-19490656833915046612024-03-21T07:00:43.389+05:30நவீன் ஹரிஓர் தேடல் நிறைந்த எழுத்துப் பயணம்Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-67970805911531852842024-01-01T13:20:00.018+05:302024-01-01T13:33:56.110+05:30வர்கலா பயணம்<p> வணக்கம் நண்பர்களே, நான் கடந்த 28/12/2023 புதன் அன்று காலை ஆறு மணிக்கு வர்கலா பயணத்திற்காக கோவை ரயில்நிலையத்தை அடைந்தேன். எனது பயணம் திடீரென நான் எடுத்த முடிவு என்பதால் என்னால் முன்பதிவு செய்ய இயலவில்லை. ஆகவே ஒரு முன்பதிவில்லா அனுமதிச் சீட்டை வாங்கிக்கொண்டு காத்திருந்தேன். என்னுடன் பயணிக்கப்போகும் சக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் ரயில் நிலையத்தின் முன்பகுதியில் காத்திருந்தனர். அவர்கள் ரயில்நிலையத்தின் முன்பகுதியில் இருக்கக்கண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்.அனைவரும் வந்து சேர்ந்த பிறகு, நாங்கள் பயணிக்கவிருந்த சபரி விரைவு இரயில் நடைமேடை இரண்டில் வருவதையறிந்து நடைமேடை இரண்டுக்கு சென்றோம். இரயில் 07:55 மணிக்கு அங்கு சரியான நேரத்தில் வர அனைவரும் S9 முன்பதிவு பெட்டியில் ஏறினர். நான் முன்பதிவு செய்யாத காரணத்தால் இரயிலின் கடைசி பகுதியில் அமைந்த முன்பதிவில்லா பெட்டியில் ஏறினேன். எதிர்பார்த்த கூட்டமில்லை எனவே அனைவரும் விரும்பும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். இரயில் காலை 9:00 மணியளவில் பாலக்காட்டை அடைந்தது.முன்பே வாளையார் அருகே, சக கணித ஆசிரியர் பாலக்குமார் அவர்கள் அலைபேசியில் அழைத்து S9 பெட்டியில் இருக்கையிருப்பதாக கூற, பாலக்காட்டில் இரயிலிலிருந்து இறங்கி S9 பெட்டிக்கு விரைந்தேன். அங்கு இருக்கையில் அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து கொண்டேன். காலை உணவு பரிமாறப்பட்டது. மூன்று இட்லி மற்றும் கெட்டி சட்னி, சாம்பார்.இரயில் ஒட்டப்பாலம் கடந்து சொரணுரில் அதிக நேரம் நின்றது. பின், வேகமெடுத்து திருச்சூர்,ஆலுவா போன்ற ஊர்களைக் கடந்து சென்றது. மதியம் ஒரு மணிக்கு மதிய உணவை அருந்தினோம். காளான் பிரயாணி, தயிர் சாதம் ஊறுகாயுடன் பரிமாறப்பட்டது. காலை மற்றும் மதிய உணவை வழங்கிய எங்கள் பள்ளி தலைமையாசிரியை திருமதி. பானுமதி அவர்களுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து, அவர் கொடுத்த நேந்திரம் பழ சிப்ஸ் பேகட்டை இரவு உணவிற்காக பத்திரப்படுத்திவிட்டேன். பின், கடலும், ஆறும் இணையும் இடங்கள், ஆறுகள், காடுகள் என இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு சென்றேன். இரயில் மாலை 17:30 மணிக்கு வர்கலா இரயில் நிலையத்தை அடைந்தது. வர்கலா இரயில் நிலையத்தில் அனில் என்ற பயண விரிவுரையாளர் அறிமுகமானார். அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். பின்னர், 27 பேர் கொண்ட எங்கள் குழு நாங்கள் அன்றிரவு தங்கும் வீட்டிற்கு சென்றோம். திரு.அனில் அவர்கள் எங்களை வென்குளம் என்னும் ஊருக்கு அழைத்துச் சென்று வீட்டை காட்டினார். நாங்கள் அனைவரும் எங்களது அறைகளுக்கு சென்று நீராடி புத்துணர்வு பெற்று வர்கலாவில் 'அரபிகடலின் முத்து' எனப் புகழ்பெற்ற பாபநாசம் கடற்கரையை பார்க்கச் சென்றோம். இருள் சூழ்ந்ததால் ஏமாற்றமடைந்தாலும் கடற்கரையில் சிறிது நேரம் கழித்து விட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பினோம். நான் வர்கலாவில் கோவில் கொண்டுள்ள ஜனார்தனனை திசை நோக்கித் தொழுது கொண்டு விடுதிக்கு திரும்பினேன். இரவு விடுதியில் ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்த நாள் காலையில் 06:00 மணிக்கு இரண்டு வேன்கள் வந்து நின்றது. சரியாக 06:30 மணிக்கு வேனில் ஏறி புறப்பட்டு முதலில் சிவகிரி என்ற இடத்திற்கு சென்றோம். இங்கே, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தத்துவம் மற்றும் சமூக சமத்துவத்திற்காக பாடுபட்ட ஸ்ரீ நாராயண குரு என்ற மகானின் சமாதி உள்ளது. இங்கே சிருங்கேரியில் உள்ளது போல் அன்னை சாரதா தேவி தாமரையில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். அன்னையை வணங்கிவிட்டு மேலே நடந்தால் ஸ்ரீ நாராயண குரு பௌதிக உடல் நீத்த குடில். சாளரம் வழியாக அவரது அறையில் நாற்காழி முதலிய பொருட்களை காணமுடிந்தது. அதைத்தொடர்ந்து வந்தது, கண்ணாடி அறை அதில் ஸ்ரீ நாராயண குரு பயன்படுத்திய கோல்,குவளை,வண்டி உள்ளிட்ட பொருட்களை கண்டோம். பின் ஸ்ரீ நாராயண குருவின் மூத்த சீடரான போதாநந்தா ஸ்வாமிகளின் சமாதியை கண்டு வணங்கி மேலே செல்ல ஸ்ரீ நாராயண குருவின் சமாதி பளிங்கு கற்களால் ஆன அறையை காணமுடிந்தது. அவரது சமாதியில் ஒருவிதமான ஆன்மீக அதிர்வலைகளை சற்று உணர முடிந்தது. பின் மணல் பரப்பிய தளத்தில் நடக்கும் போது மூணாரிலிருந்து அங்கு வந்திருந்த மூத்த சந்நியாசி ஒருவர் ஓர் சிறிய சொற்பொழிவு நடத்தி நெகிழவைத்தார். பின், காலை சிற்றுண்டியை சிவகிரி மடத்திலேயே பிரசாதமாக உண்டோம். நிலக்கடலை கலந்த புட்டும் வாழைப்பழமும் தந்தார்கள் அத்தோடு சுக்கும் கரும்பு சர்க்கரை கலந்த தேநீர். அருமையாக இருந்தது. பின், அங்கிருந்து கிளம்பி ஸ்ரீ நாராயண குருவின் பிறப்பிடமாக செம்பழந்தி என்ற இடத்திற்கு சென்றோம். இங்கு ஸ்ரீ நாராயண குருவின் கோவிலும் அவர் பிறந்த கூரை வீடும் அதே நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ நாராயண குருவின் தாய் ஆரிய வல்லபையின் ஓவியமும் இந்த அறையில் காணக்கிடைத்தது. இங்கேயும் ஆன்மீக அதிர்வுகளை உணர முடிந்தது. பின், உலகத்திலேயே மிக உயரமான சிவலிங்கத்தைக்காண செங்கல் என்னும் சிவதலத்தை அடைந்தோம். இந்த இடத்தின் பெயர் செங்கல் மகேஸ்வரம். இந்த கோவிலில் சிவபெருமானும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் கர்பகிரகத்தில் தரிசனமளித்தனர். 108 வகையாக கணபதியின் சிற்பங்கள் கண்களை கவர்ந்தன. இங்கே எழுப்பப்பட்டிருக்கும் சிவலிங்கம் 112 அடி உயரம் கொண்டு உலகிலேயே மிக பிரம்மாண்டமான லிங்கமாக திகழ்கிறது. மகாதேவனின் அருளாசியோடு புறப்பட்டு அருவிபுரம் என்னும் தலத்தை அடைந்தோம். இங்கு ஸ்ரீ நாராயண குருவின் கையால் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் உள்ளது. இவ்விடத்தின் தெற்கே நதி ஒன்று ஓடுகிறது. இங்கே மதிய உணவை நாங்கள் அனைவரும் உண்டோம். பின், நாராயண குரு அவர்கள் தவமிருந்த குகைக்கு சென்றோம். ஆற்றின் கரையில் இயற்கை எழில் சூழ அமைந்த குகையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து விட்டு கிளம்பினோம். தற்போது மதியம் மூன்று மணியை கடந்திருந்தது. அப்போது ஆழிமலா என்ற கடற்கரைக்குச் சென்று அங்கு நிறுவப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான சிவ பெருமானின் உருவத்தை கண்டு மெய்சிலிர்த்தோம். அந்த உருவம் சிமெண்ட் பூச்சாலும்,இரசாயன கலவையாலும் உண்டாக்கப்பட்டது. ஆழிமலையில் அரைமணி நேரம் செலவிட்டு, புகழ்பெற்ற கோவளம் கடற்கரைக்கு பயணித்தோம். மாலை 4:10 அளவில் கோவளத்தை அடைந்து கடற்கரையில் அலைகளுடன் விளையாடினோம். ஆர்ப்பரித்து வரும் அலைகளில் ஒரு மணிநேரம் விளையாடி 5:00 மணிக்கு கிளம்பி உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி ஆலயத்திற்கு 6:40 மணிக்கு வந்தடைந்தோம்.இரவு 08:30 மணிக்கு எங்களுக்கு இரயில் என்பதால் சீக்கிரமாக நடந்து பத்மநாப ஸ்வாமி ஆலயத்தை தொழுது, திருவம்பாடி கண்ணனையும் தொழுது வந்தோம். வழியில் இலவசமாக சூட சூட கஞ்சி கிடைத்தது. குளிருக்கு இதமாக கஞ்சியை சாப்பிட்டு பத்மநாபனுக்கு நன்றியை தெரிவித்துவிட்டு புறப்பட்டோம். வேன் எங்களை 7:25 மணிக்கு திருவனந்தபுரம் இரயில் நிலையத்தில் சேர்த்தது. இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் நான்காம் நடைமேடையில் நின்ற அமிர்தா விரைவு இரயிலில் ஏறினோம். சரியாக இரவு 08:30 மணிக்கு இரயில் புறப்பட்டது. காலை 4:45 மணிக்கு பாலக்காடு டவுனில் அனைவரும் இறங்கினோம். என்னுடன் வந்த அனைவரும் பேருந்து பிடித்து கோவை செல்ல சென்றுவிட்டனர். நான் அங்கேயே ஒரு மணி நேரம் காத்திருந்து பாலக்காடு -திருச்சி விரைவு இரயிலில் பயணித்து போத்தனூரை அடைந்து 30/12/2023 அன்று காலை 8:30 மணிக்கு மீண்டும் வீட்டை அடைந்தேன். ஜனார்தன ஸ்வாமியை காணாத வருத்தம் ஒருபுறமிருந்தாலும், மற்ற இடங்களை ஒரே நாளில் கண்ட மகிழ்ச்சி ஆறுதலளித்தது. மொத்தத்தில்,வர்கலா சிவகிரி பயணத்தில் பல அனுபவங்களை பெற்றேன். வழியில் அறியாமல் இருந்த ஒரு சில ஊர்களைப் பற்றி அறிந்துகொண்டேன்.</p><p><br /></p><p><br /></p>Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-57140830562340659082022-10-04T09:20:00.000+05:302022-10-04T09:20:33.171+05:30திடீர் குருவாயூர் யாத்திரை<p> வணக்கம் நண்பர்களே, </p><p><br /></p><p> வலைதளம் பக்கம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. காரணம் எழுத ஏதும் கிடைக்கவில்லை. அதே சோறு, தூக்கம், ஏக்கம், வேலை என ஸ்வரஸ்யமாக எதுவும் கிடைக்கவில்லை. </p><p> ஆனால் தற்போது ஒரு யாத்திரை மேற்கொண்டேன் அதை குறித்து பகிர்கிறேன். </p><p> நேற்று அக்டோபர் 3,திங்கட்கிழமை திடீரென எந்த திட்டமிடலும் இல்லாமல் குருவாயூருக்கு கிளம்பி விட்டேன். அது சரி, திட்டமிட்டு கிளம்ப குடும்பமா குட்டியா... தனிமரம் தனி சுகம். காலை ஏழு மணி அளவில் பையை தூக்கிக்கொண்டு பேருந்துக்கு சென்றேன். சுமார் ஏழரை மணிக்கு உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி 8:30மணிக்கு பாலக்காட்டில் இறங்கி அப்போதே திருச்சூர் பேருந்தில் ஏறினேன். ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு திருச்சூரை 10:30 மணிக்கு அடைந்து பின் குருவாயூருக்கு போகும் பேருந்தில் ஏறி 11:30 மணியளவில் குருவாயூரை அடைந்தேன். அங்கே வேஷ்டி மற்றும் துண்டுக்கு மாறி, கோவிலில் வரிசையில் நிற்கையில் மணி மதியம் 12:30. இரண்டு மணி நேர காத்திருப்பிக்கு பின் பிற்பகல் இரண்டரை மணிக்கு குருவாயூரப்பன் வராக மூர்த்தியாக தரிசித்து பின் வெளியே வந்தவுடன் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாலை 4:30 மணிக்கு நடை திறப்பார்களாம். பல வண்ண வண்ணக் காட்சிகளைக் கண்ட வண்ணம், (சுவரோவியங்கள்) ஏனென்றால் நான் மிகவும் நல்லவன், நடந்து வெளியே வர ஒலிபெருக்கியில் இலவச மதிய உணவிற்கான அறிவிப்பு வந்தது. ஓசி சோற்றை விடுவேனா? புகுந்து விட்டேன். திருப்தியாக சாப்பிட்டு பின் வந்து பேருந்திலேறி திருச்சூரை அடைந்து அங்கிருக்கும் வடக்குநாதரையும், பரமேற்காவு பகவதியையும் தொழுதுவிட்டு பேருந்து நிலையம் வந்து பார்த்தால் திருச்சூரிலிருந்து உக்கடம் வரையிலான பேருந்து காத்துக் கொண்டிருந்தது. ஜாலியாக ஏறியமர்ந்தேன் 7:30 மணிக்கு. இரவு 10 மணிக்கு உக்கடம் வந்து சேர்ந்து பின் ஒரு உள்ளூர் பேருந்தில் ஏறி வீட்டை இரவு 11:00 மணிக்கு அடைந்தேன். இதில் நான் வியந்தது என்னவென்றால் எல்லாம் தகுந்த நேரத்தில் நடந்தது. மதியம் தரிசனம் செய்ய இயலாமல் போயிருந்தால் மாலை 4:30 மணிக்கு மேல் தான் தரிசனம் செய்திருக்கவியலும். பின் வடக்குநாதரை தரிசனம் செய்ய சமயமிருந்திருக்காது. என்னை யாத்திரை முழுவதிலும் பார்த்தசாரதியாய் வழிநடத்திய கண்ணன் எனது வாழ்க்கையையும் வழிநடத்துவான் என்பதில் சந்தேகமில்லை. நமது திட்டங்கள் பொய்த்துப் போகலாம் ஆனால் இறைவனது திட்டம் என்றும் பொய்ப்பதில்லை என்பதை நேற்று உணர்ந்தேன். </p><p><br /></p>Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-91987754053157330692020-12-27T15:47:00.002+05:302020-12-27T15:47:24.642+05:30பாவமூட்டை<p>சிறுகதை போட்டிக்கு நான் எழுதிய மூன்றாவது கதை</p><p><br /></p><p> </p><p> </p><p> </p><p>" என்னடா வெங்காய மூட்டையெல்லாம் வண்டியில அனுப்பியாச்சா" என்று கேட்டபடி வெள்ளை வேட்டி,சட்டையுடன் வந்து நாற்காலியில் அமர்ந்தான் ராமமூர்த்தி. பெயரளவில் தான் ராமமூர்த்திஅவனது தந்தையின் காய்கறி வியாபாரத்தை தானே ஏற்று நடத்தி வந்தான்.அவனது தந்தை தனது கடும் உழைப்பால் காய் கறி வியாபாரத்தை வளர்த்திருந்தார்.எதிர்பாராத விதமாக நேர்ந்த ஒரு விபத்தினால் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, வியாபாரத்தை தான் ஏற்று நடத்தினான் ராமமூர்த்தி. அவனிடம் நிறைய வியாபாரிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவர். "என்னப்பா கண்ணப்பா மூனு மாசமா வட்டி வரல, வீட்டுப் பத்திரம் ஞாபகம் இருக்குதா?" என்றான் ஒரு வியாபாரியிடம்." அண்ணே, மழையில சரியா வியாபாரமே இல்லண்ண, கொஞ்சம் பொறுங்கண்ண, அடுத்த மாசம்..." என்றிழுத்த வியாபாரியிடம் " அப்படியா, சரிப்பா... அடுத்த மாசமே குடு ஆனா வட்டிக்கு வட்டியா சேர்த்து வரணும்" என்றான். அந்த வியாபாரி " ஐயா....."என அழுதவாரே இழுத்தான் அந்த அப்பாவி வியாபாரி." "அது சரி...உன் கஷ்டம் உனக்கு என் கஷ்டம் எனக்கு சரி ஒன்னு செய்யலாம் உன் வீட்டில் ஒரு சிட்டிருக்கே அதை என்னிடம் வர சொல்லு கணக்க தீத்துபுடலாம்" சற்றும் இரக்கமில்லாமல் அனைவரின் முன்னிலையிலும் பச்சையாக கூறினான் ராமமூர்த்தி. இதனை கேட்ட வியாபாரி அழுது கொண்டே போய் அவமானம் தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். </p><p> ராமமூர்த்தி தான் அவர் தற்கொலைக்கு காரணமென தெரிந்திருந்தும் விலை போன காவலர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. பாவம் அந்த குடும்பம் நிர்கதியானது.ஊரில் காய் கறி வியாபாரிகளுக்கு அவனால் மிகுந்த இடையூறுகள் ஏற்பட்டன. ராமமூர்த்திக்கு மந்திரி செல்வாக்கு கூட அதிகம். தன்னிடம் இருக்கும் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அவ்வூரில், அவனிடம் மட்டுமே அனைத்து சில்லரை வியாபாரிகளும் காய் கறிகளை வாங்கும் நிலையை ஏற்படுத்தி விட்டான். விலையையும் கூட்டி அநியாயம் செய்து கொண்டிருந்தான். எதிர்த்துக் கேட்டவர்களுக்கு தந்திரமான முறையில் தொல்லைகள் கொடுத்து அவர்களைக் கடன் வாங்கத் தூண்டிடுவான். </p><p> </p><p> ஒரு கட்டத்தில் அவனிடம் கடன் வாங்கியவர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வளவு அக்கிரமங்களைச் செய்யும் அவனை கேட்க மக்கள் எவரும் துணியவில்லை. தனது ஊர் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் சொந்த காரர்களுக்கு மட்டும் நல்லது செய்து, ஊர் உயர் பதவிகளில் அந்த படித்த இளைஞர்களை அமரவைத்து தனது மகுடிக்கு ஆடும் பாம்புகளாக அவர்களை வைத்திருந்தான். அவர்களின் மூலம் பல நிலம் சம்பந்தப்பட்ட அரசாங்க வேலைகளை தானும் சாதித்துக் கொண்டு இருந்தான். இதுபோக, ஊரில் அதிக வட்டிக்கு தன் பணத்தை விட்டு வியாபாரம் செய்தான். வட்டி கட்ட இயலாத சிறு வியாபாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினான். இன்னும் கொடுமை என்னவென்றால் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்களை சீரழித்தான். இவ்வாறு ஒரு ஏகாதிபத்தியம் போல தன் அரசியல் பலத்தாலும் பண பலத்தாலும் ஊரையே தனது ஆளுகைக்குக் கீழ் வைத்திருந்தான் ராமமூர்த்தி. </p><p><br /></p><p> அவன் பல அநியாயங்களை அரங்கேற்றிய வண்ணமிருந்தான்.ஒருமுறை, ராமமூர்த்தி தனது அறையில் வேறொரு பெண்ணை அணைப்பதை அவன் மனைவி கண்டுவிட்டாள். அவனது அநியாயங்களை பொறுக்கமுடியாமல் அவனது மனைவி அவனை விட்டு விலகி தன் தந்தை வீட்டிற்கே சென்றுவிட்டாள். ராமமூர்த்தியின் கொடுமைகள் இறைவனுக்கே பொறுக்கவில்லை போலும். அவனுக்கு குழந்தைகளே இல்லாமல் போனது. அவன் போகாத கோவில்கள் இல்லை பார்க்காத மந்திரவாதிகள் இல்லை. .ராமமூர்த்தி சுடுகாட்டு வெட்டியான் ஆறுமுகத்தைக்கூட்டாக வைத்துக்கொண்டு இரவில் இருவரும் மது அருந்துவார்கள். அப்போது வெட்டியானின் தேவைகளுக்காக நிறைய பணம் தருவான் ராமமூர்த்தி.வெட்டியானை பொறுத்தவரை ராமமூர்த்தி தான் அவனுக்கு தெய்வம்.வெட்டியானின் மகனுக்கு அரசு வேலையும் வாங்கிக்கொடுத்தான். </p><p><br /></p><p> தற்கொலை செய்த நபரின் இறுதி சடங்கிற்கு மாலையுடன் மயானத்துக்கு அவன் சென்ற போது அவனை ஒரு பெண் " நீயெல்லாம் விளங்கவே மாட்டாய். சத்தியமா சொல்லுறேன் என் புருஷன் உன்கிட்ட கைநீட்டின பாவத்துக்கு அவர நோகடிச்சு கொன்னுட்டியேடா பாவி" என்றபடி சுடுகாட்டு மண்ணை தூற்றி சாபமிட்டாள். அடுத்த நாள் காலையே அதிர்ச்சியான செய்தியொன்று அவனுக்கு காத்திருந்தது. வழக்கம் போல் காலையில் எழுந்து தனது நாற்காலியில் அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்தான். மேஜை மீதிருந்த அவனது அலைபேசி அலறியது. அழைப்பை ஏற்றவனுக்கு திடீர் அதிர்ச்சி. </p><p><br /></p><p> மறுமுனையில்,"அண்ணே, சரக்கு வந்த வழியில மல செக்போஸ்ட் ல போலீஸ் கிட்ட நம்ம லாரி மாட்டீருச்சு அண்ணே. நான் தப்பிச்சோம் பிழச்சோமென காட்டிற்குள் புகுந்து வந்து உங்களோட பேசறேன். நம்ம பசங்க வசமா போலீஸ் கிட்ட மாட்டிகிச்சு"என்றான் ராசு. "காசு குடுக்க வேண்டீது தேன" என்றான் ராமமூர்த்தி. "அண்ணே, யாரோ புது ஆளாம்." "சரி நீ தலைமறைவாகிடு.நான் பாத்துக்கிறேன்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். விரைந்து தனக்குத் தெரிந்த காவல்துறை உயரதிகாரியை தொடர்பு கொண்டு விஷயத்தை கூற முற்பட்டான். ஆனால் அந்த அதிகாரியின் இடத்தில் வேறொரு அதிகாரி நியமிக்கபட்டிருந்தார். அழைப்பு துண்டிக்கப்பட்டது. இது போல் பல நிகழ்ந்தன. </p><p> </p><p> சரக்கு வரத்து குறைந்ததால் அவனது வியாபாரத்தில் படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தான். இதற்கு ஏற்றாற்போல்,அவனது வாடிக்கையாளர்களும் மெதுவாக அவனை ஏமாற்ற ஆரம்பித்தார்கள். இதனால் மனமுடைந்த ராமமூர்த்தி மந்திரவாதியொருவரை வரவழைத்து தனக்கு ஏன் தற்காலத்தில் இவ்வளவு துன்பங்கள் என்பதையறிய முயற்சி செய்தான். அந்த மந்திரவாதியோ ராமமூர்த்தியிடம் அந்த பூஜை இந்த பூஜை யென நிறைய பணத்தைக் கொள்ளையடித்து சென்றுவிட்டான்.</p><p> </p><p> ராமமூர்த்தி மிகுந்த வருத்தமடைந்தான்.அவனை சுற்றியிருந்த கூட்டம் அவனிடம் செல்வம் குறைய தொடங்கியதையறிந்து அவனிடமிருந்து படிப்படியாக விலகிச் செல்லலாயினர். அவனது செல்வாக்கு குறைய ஆரம்பித்தது.அவனால் பாதிப்படைந்த பலர் அவனை பழிவாங்க துடித்தனர். படிப்படியாக தனது சொத்துக்களை இழந்தான். போதாக்குறைக்கு வயோதிகம் வேறு அவனை படுத்தியெடுத்தது.மருத்துவமனைக்கு நடந்து நடந்து அவன் கால்கள் தேய்ந்ததுதான் மிச்சம். </p><p> </p><p> ஒருநாள், ராமமூர்த்தி தனது வீட்டு முற்றத்தில் நாற்காலியில் அமர்ந்து சற்று கண் வளர்ந்தான். அப்போது அவனால் பாதிக்கபட்ட ஒருவன் அவன் மீது கல்லெறிந்தான் அந்த கல் ராமமூர்த்தியின் நெற்றியில் பட்டு ரத்தம் கசிந்தது. "ஐய்யோ அம்மா..." ராமமூர்த்தி கூச்சலிட்டுக்கொண்டே நிலத்தில் சரிந்தான். அவ்வழியாக வந்த வெட்டியானின் மகன் கலைச்செல்வன் ராமமூர்த்தியை மருத்துவமனையில் சேர்த்தான். வெட்டியானும் விசயமறிந்து மருத்துவமனைக்கு விரைந்தான். </p><p><br /></p><p> ராமமூர்த்தியை அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தனர். "ரத்தம் அதிகமா போனதால...மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிரமம் இருக்கு, வி வில் ட்ரை அவர் பெஸ்ட்" மருத்துவர் கூறி சென்றார். நாட்கள் கடந்தன ராமமூர்த்தியின் உடல் நிலை சற்று சீரடையவே அவனை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அறைக்கு மாற்றினர். அறையில் ராமமூர்த்திக்கு நினைவு திரும்பிடவே, தான் செய்த தவறுகளை எண்ணிவருந்தினான். ராமமூர்த்தி கண் திறந்ததைக்கண்ட ஆறுமுகம் சற்று ஆறுதலடைந்து "சாமி ஏதாது ச்சாப்பிட்ரீகளா?" என கண்ணீரோடு கேட்டான். ராமமூர்த்தி ஏதும் பேசவில்லை. அவனது கண்களில் கண்ணீர் குளம் போல தேங்கியிருந்தது. தனது வாழ்க்கையை ஒரு முறை திரும்பிப்பார்த்தான். எத்தனை கொடுமைகள், எத்தனை அக்கிரமங்கள். கோரமான முகமொன்று அவன் கண் முன் தோன்றியது. தனது நிலையை கண்டு தானே அஞ்சி நடுங்கினான் ராமமூர்த்தி.</p><p><br /></p><p> "ஆறுமுகோ, இனி நான் பொழக்கமாட்ட. எனக்கு எஞ்சி இருக்கறது என் வூடு மட்டுந்தே.அத என் மனைவிக்கு அப்புரோ நீ எடுத்துக்கோ. ஊ மவன் கிட்ட சொல்லி நா அடமானத்துக்கு அப்பாவி ஜனங்க கிட்ட புடுங்கி வைச்ச பத்தரத்த யெல்லா அவுங்கவுங்க கிட்டயே கொடுத்திட சொல்லு.இப்புடியாது என்னோட பாவ மூட்டையோட பாரோ கொஞ்மாவது குறயுதானு பாக்கலாம்" என்று சொல்லி கண்களை அகன்று விழித்தான் ராமமூர்த்தி. ஆறுமுகம் கதறிக்கொண்டு மருத்துவரை அழைத்து வருவதற்குள் ராமமூர்த்தியின் உயிர் பிரிந்திருந்தது. </p><p><br /></p><p> காரியத்திற்கு பின்னர், இராம மூர்த்தியின் மனைவியின் துணைகொண்டு ராமமூர்த்தி ஏற்கனவே யார் யாரிடம் வரவு செலவு என்ற விஷயங்களை எழுதி வைத்திருந்த குறிப்பேட்டை பெற்று, அதனைக் கொண்டு ஆறுமுகமும் அவன் மகனும் நேர்மையாக செயல்பட்டு பத்திரங்களைப் பத்திரமாக அவரவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். </p><p> </p><p> இரண்டு நாட்கள் கழித்து அவ்வூர் டீக்கடை பெஞ்சில் சிலர் அமர்ந்திருக்க, "ராமமூர்த்தி கத இப்படி முடிஞ்சு போச்சே" என ஒருவர் கிசுகிசுக்க மற்றொருவர் அதற்கு "ஆமாப்பா, எப்படியோ என்னோட பத்திரம் வந்திருச்சு..இனிமே கொல சாமி சத்தியமா கடனே வாங்கமாட்டேனப்பா சாமி" என நிம்மதி பெருமூச்சு விட்டான்.</p><p><br /></p><p> டீ கடையில், " ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கத உனக்கு தெரியுமா" என்ற பாடல் சன்னமாக ஒளித்துக்கொண்டிருந்தது. </p><p> </p><p> ***முற்றும்***</p>Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-74453993633964898502020-12-18T17:47:00.008+05:302020-12-19T02:55:20.560+05:30பிரியமான தோழி<p><br /></p><p>சிறுகதை போட்டிக்கு நான் எழுதிய இரண்டாவது கதை </p><p> </p><p> </p><p> சரஸ்வதி அவசரமாக தன் வீட்டுக்கு புறப்பட்டு கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து அவளைப் பார்க்க ஓர் வயதான பாட்டி லொக்கு லொக்கு வென இரும்பிக்கொண்டு வந்தார். "பாட்டி, அங்கேயே உட்காருங்க.இதோ வருகிறேன்" பையை மேஜைமேல் வைத்தபடி பாட்டியிடம் கூறினாள் சரஸ்வதி. வேகமாக வந்து பாட்டியை பரிசோதித்து, " பாட்டி, உங்களுக்கு சளி பிடுச்சிருக்கு.நீங்க பனிகாலத்துல வீட்ல இருக்கறது தான் நல்லது.இந்தாங்க இந்த மாத்திரையை இரண்டு நாள் காலையும் மாலையும் சாப்பாட்டுக்கு பின் சாப்பிடுங்க" என்று தனது மேஜை மேலிருந்த மாத்திரை அட்டையை எடுத்து இலவசமாக பாட்டியிடம் வழங்கினாள்.சரஸ்வதி எப்போதுமே வயதான ஏழை பெண்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆகவே, அப்பகுதியில் அனைத்து பாட்டிமார்களும் மருத்துவத்திற்கு சரஸ்வதியைத்தான் அணுகுவார்கள்.</p><p>இவள் அதன் பின் கிளம்பி வீட்டுக்கு சென்றாள். மணி இரவு பத்தரையாகியிருந்தது. தனது காரையியக்கி வீட்டை அடைந்தாள். வீட்டின் சாவியை மறந்து தனது மருத்துவமனை அறையிலேயே விட்டுவந்துவிட்டாள். தனது வீட்டில் வேலை செய்யும் உறவுக்கார மற்றும் நம்பிக்கையான பெண் கலைவாணியிடம் ஒரு சாவி அவசரத்திற்கு கொடுத்து வைத்திருந்தாள்.</p><p>கலைவாணியும் சரஸ்வதியும் சமவயதுப் பெண்கள். கலைவாணியின் குடும்பம் பொருளாதார வசதி இல்லாமல் கஷ்டப்படும் குடும்பம். சரஸ்வதியும்,கலைவாணியும் சிறுவயதில் ஒரே பள்ளியில் படித்தாலும் கலைவாணி பாதியில் படிப்பை நிறுத்தவேண்டிய சூழ்நிலை வந்தது. அதற்குக் காரணம் கலைவாணியின் குடிகாரத் தந்தையின் திடீர் மரணம். கலைவாணியின் தாயும் அதைத் தொடர்ந்து இரண்டே வருடங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அதிலிருந்து கலைவாணி சரஸ்வதியின் பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள். பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு சரஸ்வதியின் வீட்டிலேயே இருந்தாள். சரஸ்வதியின் பெற்றோர் கலைவாணிக்கு நல்ல வரனாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். சரஸ்வதிக்கும் மாப்பிள்ளை பார்த்தனர் ஆனால் அவள் வந்த வரன்களையெல்லாம் வேண்டாமென சொல்லிவிட்டாள். தான் மேலும் படிக்க வேண்டும் எனக்கூறிவிட்டாள். தற்போது கலைவாணிக்கு திருமணமாகி ஒரு வருடமாகிவிட்டது.</p><p>சரஸ்வதி முழு நேர மருத்துவராக மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தாள். கலைவாணியிடம் வீட்டின் சாவியை கேட்க தனது அலைபேசியில் அழைத்தாள் கலைவாணி அழைப்பை ஏற்கவில்லை. சரஸ்வதியின் பெற்றோர் சுற்றுலா சென்றுவிட்டனர்.வருவதற்கு பத்து நாட்களாகும். இரண்டு தெருக்கள் தள்ளி கலைவாணியின் வீடு இருப்பதால் அங்கு சென்று வாங்கிவர எண்ணினாள் சரஸ்வதி. சரஸ்வதி கலைவாணியின் வீட்டை அடைந்த சமயம் அங்கு விளக்குகள் அணைந்திருந்தது. சரஸ்வதி மெதுவாக சன்னலோரம் செல்லும் போது அவர்கள் அந்தரங்கமாக இருப்பதை பார்த்து விட்டாள். சரஸ்வதிக்கு மனதில் கல்யாண ஆசை துளிர்விட்டது. வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.அவர்களை இந்த நேரத்தில் தொந்தரவு செய்யக்கூடாது என்றாலும் தனக்கு வீட்டின் சாவி வேண்டும் என்ற நிர்பந்தத்தால் கலைவாணியின் வீட்டுக் கதவை தட்டினாள் சரஸ்வதி.</p><p>கலைவாணியும் அவள் கணவனும் திடுக்கிட்டு வெளியே வந்து பார்த்தால் வெளியே சரஸ்வதி கோட்டோடு நின்றிருந்தாள். " என்ன அக்கா, இந்த நேரத்தில?" என்றாள் கலைவாணி. " பதறவேண்டாம் கலை. நான் க்ளினிக்ல புறப்பட்டப்போ ஒரு பாட்டி வந்ததால அவங்களுக்கு மருந்து கொடுத்திட்டு அவசரமாக கிளம்பினேன் கிளம்பினப்போ எனது வீட்டு சாவியை மறதியாக மேஜை மீதே விட்டுட்டு வந்துட்டேன்" என்று தலையை</p><p> தேய்த்தபடியே சொன்னாள் சரஸ்வதி.</p><p>" சரி சரி அக்கா, இவ்ளோ தானா, இருங்க உங்க சாவிய எடுத்திட்டு வர்றேன்" என்று கூறிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் கலைவாணி. வீட்டிலிருந்து சரஸ்வதியின் வீட்டு சாவியை எடுத்துக்கொண்டு சரஸ்வதியுடன் புறப்பட்டாள் கலைவாணி. "இல்ல கலை. சாவிய மட்டும் கொடு நான் போய்கரேன்" என்றாள் சரஸ்வதி. "இல்லக்கா, வழியில நாய் தொல்லை அதிகம் அதனால நான் எதுக்கும் துணைக்கு வருகிறேன்" என்றால் கலைவாணி. "என்னங்க..நான் ராத்திரி சரஸ்வதி அக்கா கூடயே அவங்களுக்கு துணையாக இருந்திட்டு காலைல வர்றேன்" என்று தன் கணவனிடம் கூறிவிட்டு சென்றாள்.</p><p>கலைவாணி சிறுவயதிலிருந்து அதே ஊரில் வளர்ந்தவள் என்பதால் அவளுக்கு அங்கு அனைவரையும் தெரியும். ஆனால் சரஸ்வதி அவ்வூரில் பிறந்திருந்தாலும் படிப்பு,கல்லூரி என நகரங்களிலேயே வாழ்ந்தவள். ஆனால் கலைவாணி,சரஸ்வதியின் நட்பு மட்டும் தொடர்ந்து கொண்டு இருந்தது. என்ன தான் சரஸ்வதி படித்திருந்தாலும் நடைமுறை விசயங்கள் அவளுக்கு அவ்வளவாக தெரியாது. கலைவாணி தான் அவளுக்கு எல்லாம் செய்து கொடுப்பாள்.</p><p>கலைவாணி தனக்கு சரஸ்வதியின் பெற்றோர் அளித்த வாழ்க்கைக்கு நன்றியாக சரஸ்வதிக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்தாள். அவ்வப்பொழுது சரஸ்வதி தன் தோழி இதையெல்லாம் செய்வது தனக்கு பிடிக்கவில்லை என கூறியும் கலைவாணி கேட்க வில்லை. " நான் உனக்காக செய்யவில்லை உன் அப்பா அம்மா எனக்கு கொடுத்த வாழ்க்கைக்காக செய்கிறேன்.அன்னிக்கு என் அப்பாவும் அம்மாவும் இறந்தப்ப அவங்க என்ன கைவிட்டிருந்தா இந்நேரம் என்னோட நிலைமை என்னவாயிருக்குமுன்னு எனக்கு இப்ப நினைச்சா கூட பயமா இருக்குது"என்பாள்.</p><p>சரஸ்வதி அவளது புராணத்தை கேட்டு அழுத்துப்போய் தூங்கியே விடுவாள். அன்று கலைவாணியும் சரஸ்வதியும் சரஸ்வதியின் இல்லத்திலேயே தங்கி விட்டனர். சரஸ்வதி கலைவாணியிடம் "நாம ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கி எத்தன வருஷமாச்சு"என்றாள். இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர். சரஸ்வதி தனக்கு தூக்கம் வரவில்லை எனவும் ஏதேனும் திகில் படம் பார்க்கப் போவதாகவும் கூறிச்சென்றாள். சரஸ்வதியின் அறையில் சுவற்றை ஒட்டிய பெரிய திரை தொலைகாட்சியிருக்கிறது. அதை வீட்டுவேலை செய்யும் போதெல்லாம் கலைவாணி அதில் படம் பார்த்தால் நன்றாயிருக்கும் என்று நினைப்பாள். ஆனால் பாவம் அவளுக்கு அந்த தொலைக்காட்சியை இயக்கத் தெரியாது. இப்போது சரஸ்வதி அதில் படம் காட்டப்போகிறாள் என்றவுடன் ஒரே ஆனந்தம் கலைவாணிக்கு. "அக்கா , எனக்கும் தூக்கம் வரல" நானும் படம் பார்க்க வருகிறேன் என்றாள்".</p><p> </p><p> இருவரும் படம் பார்க்க அமர்ந்தனர். சரஸ்வதி அமேசான் தளத்தில் புதிதாக வெளியான ஒரு திகில் படத்தைப்போட்டாள் அதில் வந்த சில காட்சிகள் கலைவாணியை பயமுறுத்தினாலும் சரஸ்வதியின் துணையோடு அவள் அதைப் பார்த்தாள்.அந்த படத்தில் ஒரு கயவன் சொத்துத் தகராறில் ஒரு பெண்ணைக் கொன்று அந்த பெண்ணின் சடலத்தை உருத்தெரியாமல் எரிக்க இடுகாட்டுக்கு கொண்டு செல்கிறான் அப்போது அங்கிருந்த வெட்டியானிடம் லஞ்சம் கொடுத்து அந்த பெண் சடலத்தை எரிக்கச் சொல்கிறான். சடலத்தை எரிக்க அவர்கள் எத்தனித்த போது அங்கு வானத்திற்கும் பூமிக்குமாக ஒரு பெரிய பெண்ணின் முகம் தோன்றியது.அந்த முகத்தை பார்க்கவே பயங்கரமாக இருந்தது.கலைவாணி தன் கண்களை மூடிக்கொண்டாள் ஆனால் சரஸ்வதி மும்மரமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.</p><p> அந்த முகத்தில் ஆங்காங்கே வெடிப்புக்களும் ரத்தக்காயங்களும் இருந்தன. திடீரென அந்த முகம் தன் வாய் திறந்து பேச ஆரம்பித்தது. அதன் வாயில் அனைத்து பற்களும் சுறாமீனின் பற்களை போல் கோரை பற்களாக இருந்தது. அந்த பேய் சொன்னது " எனது உடல் எரியும் முன் நீங்களிருவரும் எரிந்து சாம்பலாக போகிறீர்கள்" எனக் கூறி தனது விழிகளை அகன்று விழித்தது. உடனே அந்த கண்களிலிருந்து நெருப்பு வரத்தொடங்கியது. அந்த கயவனும், வெட்டியானும் பயந்து ஓடினர் ஆனால் அவர்களால் தப்பிக்கவியலவில்லை. அவர்கள் இருவரும் எரிந்து சாம்பலானார்கள். இதை மிகவும் விறுவிறுப்பாக இருவரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.</p><p> இதன் பின் ஒருவழியாக படம் முடிவுக்கு வரவே, இருவரும் தூங்கிவிட்டனர். கலைவாணி இதற்கு முன் இது போன்ற பெரிய திரையில் படம் பார்த்ததில்லை என்பதால் அந்த காட்சிகள் அவள் மனத்தில் பதிந்து விட்டது. கலைவாணி திடீரென திடுக்கிட்டு கத்தி கூச்சலிட்டு எழுந்தாள். சரஸ்வதி எழுந்து பதற்றத்தோடுயிருந்த கலைவாணியை தெளிவித்து கேட்ட போது, இரவு ஆழ்ந்த உறக்கத்தில் அவளிருந்த போது கனவில் படத்தில் பார்த்த உருவத்தைப் போலவே ஒரு உருவத்தை கண்டதாகவும், அவ்வுருவம் நெருப்பை கக்கிக் கொண்டு தன்னை துரத்தியதாகவும் தெரிவித்தாள்.</p><p>சரஸ்வதி மருத்துவராதலால் கலைவாணியின் நிலைமையை புரிந்து கொண்டு தான் செய்த தவறை புரிந்துகொண்டாள். மேலும் கலைவாணியை சரஸ்வதி பரிசோதித்த போது கலைவாணி தாயாகும் அறிகுறிகளைக் கண்டறிந்து மகிழ்ச்சியுற்றாள். அப்போது எதுவும் கலைவாணியிடம் சொல்லாமல் அவளை அமைதியாக உறங்கவிட்டு காலையில் கலைவாணியிடம் ஒரு சூடான காபியைக் கொடுத்து கலைவாணியிடம் அந்த நல்ல செய்தியை பகிர்ந்தாள். கலைவாணியால் சந்தோஷத்தை தாங்க முடியவில்லை. தனது கணவனிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளத் தன் வீட்டுக்கு விரைந்தாள்.</p><p> வீட்டில் கணவனிடம் கலைவாணி விசியத்தை சொல்லவே அவள் கணவன் ஆனந்தத்தோடு இனிப்புகளை வாங்கிக்கொண்டு சரஸ்வதியின் வீட்டிற்கு சென்று சரஸ்வதிக்கு இனிப்புகளை வழங்கினார். சரஸ்வதி, கலைவாணியை நன்றாக கவனித்து கொள்ளும் படி அவள் கணவனுக்கு அறிவுரைகளை வழங்கினாள். அவ்வப்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வருமாறும் கூறினாள். நாட்கள் நகர்ந்தது. சுற்றுலா முடிந்து வந்த பெற்றோர் விசியமறிந்து கலைவாணிக்கு நல்ல முறையில் சீமந்தமும் செய்து வைத்து மிகுந்த அக்கரையுடன் கவனித்தனர்.கலைவாணிக்கு மாதம் நெருங்கியது. சரஸ்வதி கலைவாணிக்கு அவ்வப்பொழுது இலவசமாக சிகிச்சைகள் செய்து, தக்க அறிவுரையும் வழங்கி இறுதியில் பிரசவமும் இலவசமாகச் செய்தாள்.</p><p>கலைவாணிக்கு பெண்பிள்ளை பிறந்தது. சரஸ்வதியின் தூய்மையான சேவைக்காக கலைவாணியின் கணவன் சரஸ்வதிக்கு பரிசு கொடுக்க எண்ணி தன்னால் இயன்ற ஒரு கிராம் தங்கத்தை வழங்கினான். அதனை மனதளவில் ஏற்றுக் கொண்ட சரஸ்வதி, அதனை அந்த பெண் குழந்தைக்கு என்றே வைத்திருந்தாள். கலைவாணியும் அவள் கணவனும் தங்கள் குழந்தைக்கு சரஸ்வதியே ஒரு நல்ல பெயரை வைக்க வேண்டியதையடுத்து, சரஸ்வதி அந்த குழந்தைக்கு இரண்டு கிராம் தங்க காசை அன்பளிப்பாக வைத்து 'மஹா ஸ்வேதா' என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தாள். மற்றொரு புறம், தாய்மையின் ஆனந்தத்தை உணர்ந்த சரஸ்வதி தன் பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்தாள்.</p><p>****முற்றும்****</p>Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-12321035484442050392020-12-18T17:41:00.001+05:302020-12-19T02:54:51.711+05:30சந்திரஜாலம்<p>சிறுகதை போட்டிக்காக நான் எழுதிய சிறுகதை</p><p> சந்திரஜாலம்</p><p> சந்துரு (எ) சந்திரன் திருமண வயதையடைந்த ஆண் மகன். பெயருக்கு ஏற்ப வசீகரமான முகம், வாட்டசாட்டமான உடலமைப்பையும் கொண்டிருந்தான். அவனுக்கு வாழ்வில் அனைத்தும் கிடைத்தது. வசதியான குடும்பம்.அக்கறையான பெற்றோர் மற்றும் உறவினர்கள். நன்றாக படித்து மென்பொருள் துறையில் நல்ல வேலையிலும் அமர்ந்தான்.அவனுக்கு பல பெண் நண்பர்களும் இருந்தனர். அவனை பல பெண்கள் விரும்பினாலும் இவன் மட்டும் யாரையும் விரும்பவில்லை.</p><p>பெற்றோர் பார்த்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக தன்னிடம் காதலை வெளிப்படுத்திய இளம் பெண்களிடம் கூறிவிட்டான்.சந்துருவிற்கு பெண் கொடுக்க பல குடும்பங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர். இதற்கிடையில், சந்துருவிக்கு தனது வருங்கால மனைவியைப் பற்றின கற்பனையெல்லாம் இல்லாமலில்லை. பெற்றோரிடம் சொல்லத் தயங்கினாலும் தனது கனவுக்கன்னியை மானசீகமாக ஆராதித்து வந்தான்.</p><p>இவ்வாறு இருக்கையில் அவனது பெற்றோருக்கு ஒரு ஜாதகம் வந்தது. மகனுடன் கலந்தாலோசித்த பெற்றோர் பெண்ணின் புகைபடத்தை அவனிடம் காட்டினர். சந்திரனுக்கு பிடித்தும் போனது. பெண் வீட்டாரும் சம்மதம் சொல்ல சந்திரனுக்கு திருமணம் கை கூடியது. திருமணம் உறவும், நட்பும் சூழ பெரிய திருவிழாவைப் போல் நடந்தது.</p><p>சந்திரனின் மனைவி சுமதி பெயருக்கேற்ப நல்ல புத்திசாலியாகவும்,ரூபவதியாகவும் இருந்தாள். சுமதி சந்திரனை மிகவும் நேசித்தாள்..சந்துரு தனது ஆசைகளையெல்லாம் அவள் மேல் பூக்களைச் போல் வாரி இறைத்தான்.</p><p> சுமதி நல்ல மனைவியாகவும்,மருமகளாகவும் தனது கடமைகளைச் செய்து வந்தாள்.</p><p>பல மாதங்கள் கடந்து நாள்கள் நகர்ந்தன. சமுதாயம் சும்மா விடுமா? சந்திரனின் பெற்றோர்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஏதேனும் விசேஷமுண்டா எனக்கேட்டு நச்சரித்தனர். சந்திரனின் தாயார் சந்திரனிடம் சுமதியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லச் சொன்னார். சந்திரனும் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அங்கு மகளிர் நல மருத்துவர் சுமதியின் உடலை பரிசோதித்து விட்டு சந்திரனிடம் ரகசியமாக சுமதிக்கு இருக்கும் மரபணு சார்ந்த நோயைப் பற்றி விளக்கினார். இதனால் சுமதி என்றைக்கும் குழந்தை பெற முடியாது என்றும், நாளடைவில் தாம்பத்ய சுகத்தைக் கூட அவளால் துய்க்கவும், கொடுக்கவும் இயலாமல் போகும் என்ற உண்மையை சந்திரனிடம் கூறினார். சந்துரு இடிந்து போனான்</p><p>இதை ரகசியமாக காக்க வேண்டுமென சந்துரு முடிவு செய்தான். ஏனெனில், சுமதியின் குழந்தை பெறும் நம்பிக்கையை உடைக்க அவனுக்கு மனமில்லை. அதே சமயத்தில், அவளது உடலால் தாம்பத்ய சுகத்தையும் சந்திரனுக்கு தரவியலவில்லை. சந்துரு தனது மனைவியை வெறுக்க மனமில்லாமல் அவளிடம் இயல்பாக இருந்தான். சுமதியும் அவள் அத்தையும் கோவில் கோவிலாக சென்று குழந்தை வரத்துக்காக பிரார்த்தனைகள் செய்த வண்ணமிருந்தனர்.</p><p> இந்நிலையில், சந்திரனுக்கு தனது உடலின் இச்சையை திருப்திப்படுத்த இயலாமல் தவித்தான். அவர்களது பெரிய வீட்டை சுத்தம் செய்ய ஒரு பெண்ணை சந்திரனின் தாயார் வைத்திருந்தார். ஒரு ஞாயிறு அன்று ஒரு பெண் வீட்டை சுத்தம் செய்ய வந்தாள். அப்போது தான் சந்துரு அந்த பெண்ணைப் முதல் முறையாகப் பார்த்தான். அவளின் பெயர் செல்வி. சந்திரனுக்கு அப்பெண்ணை பார்த்ததும் உடலெங்கும் காமத்தீ பரவியது.</p><p> எப்படியாவது தனது இச்சையை அவளிடம் தீர்த்துக்கொள்ள எண்ணினான். அவளை ரகசியமாக கவனிக்கத் தொடங்கினான்.வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தான் அவளை நெருங்கவியலும் என்றுணர்ந்த சந்துரு ஒரு திட்டம் தீட்டினான்.</p><p> அவனது பெற்றோர் ரொம்ப நாட்களாக காசி யாத்திரை பற்றி பேசிக் கொண்டிருந்ததை தொடர்ந்து அவர்களைப் புனித யாத்திரை அனுப்ப முடிவு செய்தான். தானே முழு செலவையும் ஏற்றுக்கொண்டதோடு இருப்பதிலேயே மிகவும் வசதியான பயண நிறுவனத்தை அணுகி தன் பெற்றோரின் யாத்திரைக்கு ஏற்பாடு செய்தான். முப்பது நாட்கள் யாத்திரை அது. சார்தாமில் தொடங்கி காசி வரை ஏற்பாடானது. அவனது பெற்றோரிடம் திடீரென யாத்திரைக்கான விவரங்களைப் பகிர்ந்தான். அவர்களும் தங்கள் மகனின் குணத்தை எண்ணிப் பெருமையோடு யாத்திரைக்கு புறப்பட்டனர்.</p><p>ஒருவழியாக பெற்றோரை அனுப்பிய சந்துரு மனைவியையும் தன் அப்பா வீட்டுக்கு அனுப்பத் திட்டம் தீட்டினான். சுமதியிடம் மாமா வீட்டுக்கு செல்லலாம் எனக் கூறி அவளை அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும் சுமதிக்கு சில நாட்கள் தனது தாயுடன் இருக்க ஆசை வந்தது.</p><p> இதையே காரணம் காட்டி, அவளை அங்கேயே இருக்க வைத்துவிட்டு ஊர் திரும்பினான். தற்போது வீட்டில் சந்துரு மட்டும் தான். எப்பவும் போல செல்வி தனது வேலைக்கு வந்தாள். சந்துரு அந்நாளில் அலுவலகத்திற்கு விடுப்பெடுத்துக் கொண்டான். சமையலறையில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த செல்வியைப் பார்த்து தனது அறையில் நிறைய துணிகள் இருப்பதாகவும் வந்து எடுத்துப்போகச் சொன்னான். அவளும் யதார்த்தமாக சந்திரனின் அறைக்குள் செல்ல சந்துரு அறையை தாழிட்டான். செல்வி பதற்றமடைந்தாள். ஐயா துணி எடுக்கத்தானே சொன்னீர்கள் தற்போது ஏன் கதவை தாழிட்டீர்கள் எனக்கேட்டாள். அதற்கு சந்துரு அவளோடு சிறிது பேச வேண்டும் என்றான். அப்பாவியான அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் காட்டி, பணம் நிறையத் தருவதாக சொல்லி தனது ஆசைக்கு இணங்குமாறு வேண்டினான். ஆனால் அவள் இதெல்லாம் தவறு எனவும், தனது கணவருக்கு தான் துரோகம் செய்யக் கூடாது எனவும் கதறினாள். ஆனால் சந்துரு பலவந்தமான முறையில் அவளை தனது கட்டிலில் தள்ளினான். அவளின் புடவையை மெல்ல விலக்கினான். செல்வி பயந்திருந்தாலும் சந்திரனின் கை பட்டதும் இன்ப வெள்ளத்தில் தத்தளித்தவாறு இருந்தாள். புலியிடம் அகப்பட்ட மானைப் போல் செய்வதறியாது கிடந்தாள்.</p><p>இதற்கிடையில், வீட்டில் யாருமிருக்க மாட்டார்கள் என்றெண்ணிய சுமதி கணவனின் வீட்டுக்கு திடீரென வந்தடைந்தாள். வந்தவள், வாசலில் சந்திரனின் மகிழுந்து நிற்பதைக் கண்டாள். மெல்ல சென்று வாயிற் படியில் நின்ற போது அங்கு வேலைக்காரி செல்வியின் காலணிகள் மற்றும் அவள் தினமும் கொண்டு வரும் சாப்பாட்டுக் கூடையிருந்தது. சந்தேகமடைந்த சுமதி சற்று தூரம் திரும்பி வந்து சந்திரனை அலைபேசியில் தொடர்பு கொண்டாள். அப்போது சந்துரு தான் அலுவலகத்தில் அவசர வேலையாக இருப்பதாக பதற்றத்தோடு கூறி அழைப்பைத் துண்டித்தான். சந்துரு வீட்டிலிருப்பதை உறுதி செய்த சுமதி வீட்டைச் சுற்றி வர, வீட்டின் பின்னாலுள்ள படுக்கையறை ஜன்னலோரம் கிசு கிசு சத்தம் கேட்க அங்கு சென்று தங்கள் வீட்டுப் படுக்கை அறை சுவற்றிலிருக்கும் சிறிய துவாரத்தின் வழியாக பார்த்தபோது சுமதி பதறிவிட்டாள். தன் அன்பிற்குரிய கணவன் வேலைக்காரியின் புடவையை அவிழ்த்தவண்ணம் கிடப்பதைக்கண்டு மனமுடைந்தாள். அழுதே விட்டாள். கண்களை துடைத்துக்கொண்டு யாருமறியாமல் அங்கிருந்து வெளியேறி தன் அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டாள். தனது வேதனையை தன் பெற்றோரிடம் சுமதி பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. தானே ஒரு மருத்துவரை அணுகி தனக்கிருக்கும் நோயைப் பற்றி அறிந்து கொண்டாள். சந்துரு வீட்டில் அவள் பார்த்த காட்சிகள் அவள் மனதில் ஆழ்ந்த வடுக்களை உண்டாக்கினாலும் சந்திரனின் மேலிருந்த காதல் சிறிதும் கூட குறையவில்லை. சந்திரனின் திட்டமனைத்தும் சுமதிக்கு புரிந்துவிட்டது. ஏன் போனவுடனே திரும்பி விட்டாய் என்று கேட்கக்கூடிய தன் அம்மாவிடம் என்ன சொல்வதென திகைத்த சுமதிக்கு வாட்சப்பில் ஒரு நெருங்கிய சித்தப்பா முறையானவர் மறைந்த தகவல் காரணமாய் அமைந்தது. மறுபுறம், சந்துரு செல்வியை ஆரத்தழுவி தன் தாகத்தைத்தீர்த்துக்கொண்டான். " ஐயா, வயிற்றை கழுவுவதற்காக வேலைக்கு வருகிறோம் ஏன் இப்படி மிருகத்தனமாக நடந்து கொண்டீர்கள்” என சந்திரனை திட்டி தீர்த்தாள். தான் கலங்கப்பட்டு விட்டதாக கதறினாள்.கற்பை பறிகொடுத்த செல்வி செய்வதறியாமல் இங்குமங்கும் ஓடினாள். சந்துரு எவ்வளவு காசை அள்ளி வீசியும் அவள் கேட்கவில்லை. கடைசியில் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து தன் வயிற்றில் தானே குத்திக்கொண்டு "உன்னை பழி தீர்ப்பேன்" எனக்கூறிக் கொண்டே சுருண்டு விழுந்தாள் செல்வி. ரத்த வெள்ளமோடியது. ஆறாக ஓடும் ரத்தத்தை கண்டதும் சந்திரனுக்கு பயம் தொற்றிக்கொண்டது.</p><p>உடல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள ஆசைப்பட்டு இப்படியொரு பாதகம் செய்து விட்டோமே என குமிறி குமிறி அழுதான். செல்வியின் உயிர் காற்றில் கரைந்திருந்தது. சந்துரு ரத்தத்தை சுத்தம் செய்து, நள்ளிரவு வரை பிணத்தை தனது அறையில் வைத்திருந்து, நள்ளிரவில் தனது மகிழ்வுந்தில் பிணத்தையேற்றி பக்கத்து</p><p> கிராமத்திலுள்ள சுடுகாட்டுக்கு சென்று பிணத்தை எரிக்கத் திட்டமிட்டான்.</p><p> </p><p> திட்டத்தின்படி நள்ளிரவில் சுடுகாட்டையடைந்தான். அன்று அமாவாசை. சுற்றியும் கும் இருட்டு. சுற்றிலும் மரங்கள் வேறு. பிணத்தை சுமக்க முடியாமல் சுமந்து வந்த சந்திரனை எதிர்பாராத விதமாக அங்கு சுடுகாட்டு வெட்டியான் ஒருவன் இவன் பிணத்தோடு வருவதைப் பார்த்து இவனை நெருங்கி வந்தான்.</p><p> வெட்டியானை பார்த்த பயத்தில் நடந்த உண்மையை உளறிவிட்டான் சந்திரன்.</p><p>வெட்டியானுக்கு தன் சட்டைப்பையிலிருந்த இரண்டாயிரம் ரூபாய் கட்டை நீட்டினான். வெட்டியான் முதலில் அதை வாங்க மறுத்தாலும் தனது குழந்தையின் படிப்புச் செலவை மனதில் கொண்டு அதைப் பெற்றுக் கொண்டான். பிணத்தைக் காலைக்குள் உருத்தெரியாமல் எரியவிடுவதாகவும் வாக்களித்தான்.சந்திரனும், வெட்டியானும் பிணத்தை எரிக்கத்தொடங்கியவுடன் திடீரென வானத்துக்கும் பூமிக்கும் ஓர் முகம் போன்ற உருவம் தோன்றி "அவனை பழி தீர்ப்பேன்" என இடியாக முழங்கி மறைந்தது. வெட்டியான் மயங்கி விழுந்தான்.பிணம் முழுவதும் எரிந்து சாம்பலானது. சந்துரு பதற்றத்தில் எப்படியோ காரை பிடித்து வீடு வந்து சேர்ந்தான். அப்போது அதிகாலை மூன்று மணி.தண்ணீரை கபக் கபக் கெனக் குடித்தான். பயத்தில் உறங்கியே விட்டான்.</p><p>இதற்கிடையில், காசியில் சந்திரனின் பெற்றோர் அங்கு நடந்து கொண்டிருந்த மகா ம்ருத்யூந் ஜய ஹோமத்தில் பங்கெடுத்தனர். அவர்கள் தங்களது மகனின் பூரண ஆயுளுக்காக யதார்த்தமாக பூஜை செய்தனர். அந்த மகாயாகத்தின் பலனாகவும் சுமதியின் பதி பக்தியின் பலத்தாலும் அந்தப் பேய் தூங்கிக்கொண்டிருந்த சந்திரனின் கனவில் தோன்றி அவனுக்கு உயிர் பிச்சையளிப்பதாகவும் ஆனால், அவன் செய்த பாவத்திற்கு ப்ராயச்சித்தமாக ஓர் அனாதைக் குழந்தையை தத்தெடுத்து அதற்கு செல்வி என்ற பெயரை வைத்து வளர்க்க ஆணையிட்டது. சந்துரு திடுக்கிட்டு எழுந்தான். மணி காலை ஏழாகியிருந்தது.</p><p>நாட்கள் உருண்டோடியது. சுமதி எதுவும் அறியாதது போல் வீட்டிற்கு வந்தாள். சந்துரு மனம் பொறுக்காமல் உண்மையை சுமதியிடம் உரைத்தான். சந்திரனின் பெற்றோரும் யாத்திரை முடிந்து வீடு திரும்பினர். பெற்றோர் சம்மதத்தோடு இருவரும் ஓர் பெண் குழந்தையை அரசாங்க விதிமுறைகளின் படி தத்தெடுத்து அதற்கு செல்வி எனப் பெயரிட்டு வளர்த்தனர்.</p><p>***சுபம்***</p><p> </p><p> </p><p><br /></p><p><br /></p>Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-16791593504864507092020-11-28T12:23:00.001+05:302020-11-28T12:23:20.752+05:30கொரானா காலத்தில் குருவாயூர் யாத்திரை<p> வணக்கம் நண்பர்களே,</p><p style="text-align: justify;"> எனக்கு கடந்த புதன்(25/11/2020) அன்று குருவாயூருக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது.நவம்பர் ஐந்தாம் தேதி எனது திறன்பேசி(smart phone) மூலம் குருவாயூர் கோவிலின் வலைதளத்தைப் பார்த்து, ஏதோ ஆர்வத்தில் எனக்கான தரிசன சீட்டையும் பதிவு செய்து விட்டேன். குருவாயூர் ஏகாதசி இம்மாதம் 25/11/2020 அன்று வருகிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததால் ஒருமுறை அதை உறுதிப்படுத்திக்கொண்டு, 25 ஆம் தேதி குருவாயூருக்கு என முன்பதிவு செய்தேன்.</p><p style="text-align: justify;"> இதைத் தொடர்ந்து, ஏழாம் தேதி ஒரு பக்தரிடம் இந்த விவரத்தைக் கூறி அவருக்கும் அதே நாளுக்கு முன்பதிவு செய்தேன். நாட்கள் செல்லச் செல்ல யாத்திரைக்கு இருவரும் தயாரானோம். 25ஆம் தேதியன்று காலை பதினோரு மணி எங்களது தரிசனத்திற்கான நேரம் என சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றாற்போல் பயணத்தையமைக்கத் திட்டமிட்டு 25 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு வாளையாரை அடைந்து அதன்பின், பாலக்காடு பேருந்து ஏற திட்டமிட்டிருந்தோம். 23 ஆம் தேதி திங்கள் மாலை வரை இது தான் எங்களது திட்டமாக இருந்தது. ஆனால் திடீரென திங்களன்று மாலை அந்த திட்டம் மாறியது. மேலே சொன்ன பக்தர் தனது கேரள நண்பர்களிடம் விசாரித்த போது பேருந்தை நம்ப வேண்டாம் எனக்கூறியதையடுத்து அவர் ரயிலுக்கு முன்பதிவு செய்யலாமென பரிந்துரைத்தார். உடனே ரயில் நிலையத்திற்கு விரைந்து பட்டாம்பி வரை முன்பதிவு செய்ய முற்பட்டோம் ஆனால், பட்டாம்பி வரை முன்பதிவு செய்ய இயலவில்லை. எனவே பாலக்காடு வரை முன்பதிவு செய்தோம். சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் அதிவிரைவு ரயிலில் இடம் கிடைத்தது.</p><p style="text-align: justify;"> 25ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு ரயிலேற வேண்டும். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து ரயில்நிலையம் 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. எனவே, 25 ஆம் தேதி காலையில் 2:30 மணியளவில் நடக்க ஆரம்பித்து அரை மணி நேர நடையில் ரயில் நிலையத்தையடைந்தோம். பின், உரிய தளத்திற்கு சென்று காத்திருந்த பின் நான்கு மணியளவில் ரயிலில் ஏறினோம். ஒரு மணி நேர பயணத்தின் விளைவாக காலை ஐந்து மணிக்கு பாலக்காட்டையடைந்தோம்.</p><p style="text-align: justify;"> பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அதற்கு பேருந்து கிடைக்க அரை மணி நேர தவம். பின் அங்கிருந்து பாலக்காடு பேருந்து நிலையத்துக்குச் சென்று திருச்சூர் பேருந்தைப் பிடித்து சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு எட்டு மணியளவில் திருச்சூரை அடைந்தோம். திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து குருவாயூருக்கு நிறைய பேருந்துகள் உள்ளன. 1:15 மணி நேர பயணம் செய்து காலை 9:15 மணிக்கு குருவாயூரை அடைந்தோம். குருவாயூரில், தேவஸ்தான யாத்ரிகர் சௌகர்ய நிலையத்தில் குளித்துவிட்டு, நடைப்பயணமாக மம்மீயூர் மகாதேவனை தரிசிக்கச் சென்றோம். காலை பத்து மணியளவில் மம்மீயூரை அடைந்து மம்மீயூரப்பனையும்,மகா விஷ்ணுவையும் தரிசித்து, ஆலய த்வஜஸ்தம்ப (கொடிமரம்) பிரகாரத்தில் மகாவிஷ்ணு சந்நிதி முன்னமர்ந்து ஒரு பதினைந்து நிமிடங்கள் திருநாம சங்கீர்த்தனம் செய்து விட்டு பத்தே முக்கால் மணிக்கு மீண்டும் குருவாயூரை நோக்கி வந்து, தரிசனத்திற்கான வரிசையில் எங்களது இணையவழி தரிசன முன்பதிவு சீட்டை எடுத்துக் கொண்டு நின்றோம். தரிசனத்திற்கு செல்லும் போது எவ்வித மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. கைப்பை முதலிய எதையும் அனுமதிப்பதில்லை. ஆண்கள் வேஷ்டியுடனும், பெண்கள் சம்பிரதாய உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள். </p><p style="text-align: justify;"> ஆண்கள், மேல் சட்டையை வரிசையில் காத்திருக்கும் போது மட்டும் அணியலாம். தரிசனத்திற்கு செல்லும் போது சட்டையைக் கழற்றி விட வேண்டும். காலை பதினோரு மணிக்கு வரிசையில் நின்று நாங்கள் மதியம் மூன்றே கால் மணிக்குத் தான் குருவாயூரப்பனைக் கண்டோம்.. வரிசையில் காத்திருந்த போது பக்தர்கள் சிலர் சேர்ந்து சத்தமாக நாம சங்கீர்த்தனம் செய்தோம். நாங்கள் பாடிய பஜனை வரிகள் குருவாயூரப்பனின் பரமபக்தரான பூந்தானம் அருளிய,</p><p style="text-align: justify;">" கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்தநா</p><p style="text-align: justify;"> கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே</p><p style="text-align: justify;"> அச்சுதானந்த கோவிந்த மாதவ</p><p style="text-align: justify;"> சச்சிதானந்த நாராயணா ஹரே"</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"> குருவாயூரப்பன் சங்கம்,சக்ரம், கதா,பத்மம் தாங்கி தரிசனமளித்தான். நல்ல தரிசனம் தான். நாலம்பலத்தில் அனுமதிக்காதது சற்று ஏமாற்றமாக இருந்தது. குருவாயூர் அப்பனின் கர்பகிரஹம் இருக்கும் இடம் 'ஸ்ரீ கோவில்' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்ரீ கோவிலைச் சுற்றியுள்ள முதல் பிரகாரமே நாலம்பலம் என்றழைக்கப்படுகிறது. பொதுவாக பக்தர்கள் இந்த நாலம்பலத்தில் சென்று குருவாயூரப்பனை தரிசனம் செய்வார்கள். ஆனால், தற்போது நோய் அச்சுறுத்தல் காரணமாக நாலம்பலத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை.</p><p style="text-align: justify;"> தரிசனத்தைத் தொடர்ந்து த்வஜஸ்தம்ப பிரகாரத்தை வலம் வந்து வெளியேவந்தோம். வெளியே இன்னும் கூட்டம் குறைந்தபாடில்லை...குருவாயூரப்பனுக்கும் கேரள மக்களுக்கும் என்ன அப்படியோர் பந்தமோ என எண்ணி பொறாமை கொள்ளச் செய்கிறது. அப்பனுக்கு காணிக்கையாக ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை சமர்ப்பிக்கிறார்கள். அப்பப்பா, எத்தனை தார் தாராக பழங்கள், கனிவகைகள், பூக்கள், மூட்டை மூட்டையாக தானியங்கள் மற்றும் நெய். </p><p style="text-align: justify;"> அதுபோக, விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்யும் பக்தர்களைக் கண்டாலே நாத்திகனுக்கும் பக்தி வந்துவிடும். இவ்வாறு, மாயக்கண்ணனின் சாம்ராஜ்யம் அமைதியாக குருவாயூரில் அவன் தலைமையில் அவன் அடியார்களுடன் நடக்கிறது.</p><p style="text-align: justify;"> தரிசனம் கிடைத்த பரவசத்தோடு நேரே தெற்கு நடையிலுள்ள பிரசாத கவுண்டருக்கு வந்து பிரசாதம் வாங்க வந்து நின்றோம். அங்கு நான்கு மணிக்குத்தான் பிரசாதம் விநியோகம் தொடங்கும் என்பதைத் தெரிந்து கொண்டு காத்திருந்தோம். கவுண்டர் திறந்தவுடன் பிரசாதம் வாங்கி விட்டு பேருந்து ஏறப் புறப்பட்டோம். பாலகாட்டிற்கு பட்டாம்பி வழியாகச் செல்லும் பேருந்தில் ஓடி சென்று ஏறினோம்..அது தான் அன்றைய கடைசி பேருந்தாம். மணி அப்போது மாலை 4:40.</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"> காலை இரண்டு மணிக்கு கிளம்பியதால் ஏற்பட்ட அசதி காரணமாக சிறிது நேரம் உறங்கி விட்டோம். பேருந்து சொரனுர், ஒட்டபாலம் வழியாக இரவு 7:30 மணிக்கு பாலக்காட்டையடைந்தது.அங்கு இறங்கி கோவை பேருந்தை தேடினோம் கிடைக்கவில்லை. ஒருவரிடம் கேட்டபோது அவர் கோவைக்கு பேருந்து இனி இல்லை வாளையாருக்கு சென்று போகுமாறு பரிந்துரைத்தார். எனவே வாளையார் பேருந்தைப் பிடிக்க ஆட்டோ பிடித்து அந்த நபர் கூறிய ஸ்டேடியம் பஸ் நிலையத்தையடைந்தோம்.ஆனால், அங்கு வாளையார் செல்லும் அன்றைய கடைசி பேருந்தும் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக கூறினார்கள்.</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"> என்னோடு வந்த பக்தர் மனம் தளர்ந்து,உடல் சோர்ந்து விட்டார். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் இருக்கும் சமயத்தில் குருவாயூரப்பன் அருளால் ஒரு சிந்தனை தோன்றியது. ரயில் நிலையம் சென்று ஏதேனும் ஒரு சிறப்பு ரயிலிலாவது ஏறி கோவையை அடைந்து விட வேண்டும் என்ற சிந்தனை. சற்றும் தாமதிக்காமல், ஒரு ஆட்டோவைப் பிடித்து உழவக்கோடு ரயில் நிலையத்தையடைந்து பயணச்சீட்டு அலுவலரிடம் விசியத்தைச் சொன்னோம்.</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"> அவர் சார்ட் க்லோஸ்சாகிவிட்டது . இனி தங்களால் ஏதும் உதவ முடியாது என்றார். பின் முன்பதிவு மையத்தில் இருந்த ஒரு இளம் பெண் நாங்கள் பதற்றத்தோடு இருப்பதைப் பார்த்து எங்களையழைத்து எங்கு போக வேண்டும் என்னவாயிற்று என்பதை விசாரித்து உடனே தனது கணினி திரையில் ஏதோ பார்த்த வண்ணம் 'கோவையா?' எனக் கேட்டார். நான் ஆம் என்று சொன்னேன். இரண்டு டிக்கெட் மட்டும் படுக்கை வகை பெட்டியில் இருப்பதாகக் கூறினார் அந்த பெண். அந்த பெண் மலையாளம் கலந்த தமிழில் அழகாகப் பேசினாள். ஆனால் அவள் பேச்சை ரசிக்க அப்போதைய சமயம் அனுமதிக்கவில்லை. விலை கொஞ்சம் கூடுதலாக ஆகும் எனக் கூறினாள். மேலும், அடுத்த நாள் அங்கு முழு அடைப்பு நிகழப்போவதாகவும் தெரிவித்தாள். நான் எப்படியாவது வீடு போய் சேர்ந்தால் போதுமென டிக்கெட் போடச்சொன்னேன். அந்த பெண் தொகையைக் கூறியதும் என்னிடம் போதிய பணமில்லை. எனவே, ஏ.டி.எம் சென்று பணம் எடுக்கச் சென்றேன். ஒரு இயந்திரம் இயங்கவில்லை. அருகிலிருந்த இயந்திரத்தில் பணத்தைப் பெற்று முன்பதிவு மையத்திற்கு விரைந்தேன். மணி அப்போது இரவு 8:40. 9:00 மணிக்கு வண்டி வந்துவிடும் என அந்தப் பெண் கூறியிருந்தார்.</p><p style="text-align: justify;"> டிக்கெட் தொகையை செலுத்தியவுடன் எங்களுக்கான பயணச்சீட்டை அந்த பெண் அச்சடித்து கொடுத்தார். 'மதியெல்லோ' என மலையாளத்தில் சொல்லி, வண்டி பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில் எனவும், நான்காவது தளத்தில் சற்று தாமதமாக ஒன்போதரை மணிக்கு வரும் எனவும் பதற்றபடாமல் நிதானமாக செல்லுமாறும் கூறினார். நான், தோளில் எனது துணிப்பையையும், மனதில் அந்த பெண்ணின் முகத்தையும், இனிமையான குரலையும் சுமந்து கொண்டே நான்காம் தளத்தை நோக்கிச் சென்றேன்.</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"> நானும், என்னுடன் வந்த அந்த பக்தரும் அன்று ஏகாதசி என்பதால் எதுவும் உண்ணவில்லை. நான்காம் தளத்தை அடைந்ததும் எங்களை நாங்கள் ஆஸ்வாஸப்படுத்தி, ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து குருவாயூரப்பனின் பிரசாதமான ஓர் வாழைப்பழத்தை மட்டும் உண்டோம்.</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"> இரவு 9:30 மணிக்கு ரயில் வந்ததும் எங்களுக்கான பெட்டியிலேறி எங்கள் இடத்தில் அமர்ந்தோம். ரயில் புறப்பட்டது. நாங்கள், ஒருவழியாக கோவையை இரவு 11:00 மணிக்கு அடைந்தோம். அங்கிருந்து ஒரு காரில் தத்தமது இல்லங்களை அடைந்து குருவாயூரப்பனுக்கு நன்றி கூறினோம்.</p><p style="text-align: justify;"> நாராயண... நாராயண....</p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"><br /></p><p style="text-align: justify;"> </p>Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-58060429986307893192020-07-01T12:06:00.000+05:302020-07-03T20:30:02.307+05:30குருவாயூர் ஸ்தல வரலாறு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<span style="text-align: justify;">வணக்கம் நண்பர்களே,</span><br />
<div style="text-align: justify;">
தேவசயானி ஏகாதசியான இந்த தினத்தில் குருவாயூர் ஸ்தல வரலாற்றை பகிர்வதில் ஆனந்தம் கொள்கிறேன்.<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிருஷ்ணன் குருவாயூரப்பனாக ஆனானா இல்லை குருவாயூரப்பன் தான் கிருஷ்ணனாக வந்தானா என்பதை ஸ்தல வரலாற்றைப் படித்து அறிந்துகொள்வோம் நண்பர்களே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குருவாயூர் கிருஷ்ணன் கோவில் மிகவும் பெருமை வாய்ந்தது. பகவான் கிருஷ்ணனே பூஜித்த மஹாவிஷ்ணு விக்ரஹம் தான் தற்போது குருவாயூரில் உள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவகியும் வசுதேவரும் பூஜை செய்த விக்ரஹம். முன் காலங்களில் வைகுண்டத்தில் இருந்த இந்த விக்ரஹம் ஸ்வயம் பகவானாலேயே பிருஷ்னி சுதபஸ் என்ற தம்பதிக்கு வழங்கப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிருஷ்ணி சுதபஸ் தம்பதி பகவானை பிள்ளையாகப் பெற தவமிருந்தனர். அவர்களது தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு வைகுண்ட லோகத்திலிலுள்ள பாதாள அஞ்சனம் என்ற மூர்தத்தாலான சதுர்புஜ விஷ்ணு விக்ரஹத்தை அவர்களுக்கு அளித்து தாம் மூன்று பிறவிகளில் அவர்களுக்கு பிறப்பதாக வரமளித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதன்படி, முதல் அவதாரமாக பிருஷ்ணி கர்பன் என்ற பெயரோடு பிருஷ்ணி சுதபஸ் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின், இவர்களே அதிதி கஷ்யபராக வர, அவர்களுக்கு வாமன மூர்த்தியாகப் பிறந்தார். அப்போதும் இந்த விக்ரஹம் கஷ்யபர் அதிதியின் வழிபாட்டில் இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இறுதியாக, தேவகி வசுதேவருக்கு கிடைக்கப்பெற்ற இவ்விக்ரஹம் சிறையிலேயே அவர்களால் ஆராதிக்கப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்களுக்கு கிருஷ்ணன் பிறந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கம்ஸவதத்திற்குப் பின், உக்ரசேனரை மதுராவின் மன்னனாக்கிய கண்ணன் ஆதிகேசவன் என்ற திருநாமம் கொண்ட அந்த விஷ்ணு மூர்த்தியை ஆலயம் அமைத்து ப்ரதிஷ்டை செய்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின் ஜராசந்தனால் ஏற்பட்ட கலகத்தால், மதுராவையே மாற்றி ஓர் இரவிலே துவாரகையாக்கினான். இவ்வாறு மக்களோடு சேர்ந்து ஆதிகேசவனும் துவாரகைக்கு சென்றான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கு வெகு காலம் கிருஷ்ணனால் பூஜிக்கப்பட்டு பின் உத்தவரால் பூஜிக்கப்பட்டு, துவாரகை கடலில் மூழ்கும் சமயத்தில் உத்தவரால் தேவகுரு பிருகஸ்பதி மற்றும் வாயு தேவனிடம் சேர்ந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின், அதி புராதனமான விக்ரஹத்தை பரமசிவனின் ஆஞ்ஞையால் தற்போதைய கேரளத்தில் மேற்கு கடற்கரையோரமாக அமைந்த நாராயணசரஸ் என்ற குளக்கரையின் தெற்கே பரசுராமர் மற்றும் பரமசிவனின் மேற்பார்வையில் குரு மற்றும் வாயு தேவனால் ப்ரதிஷ்டை செய்யப்பெற்று குருவாயூரப்பனாக கலியுக ஜனங்களுக்கு கிட்டியுள்ளான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நாராயண சரஸ் திருக்குளமானது ஸ்ரீமத் பாகவதத்தில் நான்காம் ஸ்கந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இங்குதான் பல கோடி வருடங்களுக்கு முன் சிவபெருமான் ப்ரசேதஸ் என்ற திருநாமமுடைய பத்து ராஜரிஷிகளுக்கு 'ருத்ர கீதம்' என்ற உபதேசத்தைச் செய்தாராம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குருவாயூரப்பனுக்கு ஸ்ரீமத் பாகவதம் என்றால் மிகவும் ப்ரியம். அதனால் தான் குருவாயூரில் எப்போதும் ஸ்ரீமத் பாகவத பாராயணம் நடைபெற்றுக்கொண்டேயிருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br />
<b>"தமத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம்</b><br />
<b>சதுர்புஜம் ஸங்ககதார்யுதாயுதம்</b><br />
<b>ஸ்ரீ வத்ஸலக்ஷ்மம் களஸோபிகௌஸ்துபம் பீதாம்பரம் ஸாந்த்ர பயோத ஸௌபகம்</b><br />
<b><br /></b>
<b>மஹார்ஹவைதூர்ய கிரீடகுண்டல</b><br />
<b>த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ர குந்தளம்</b><br />
<b>உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபிர் விரோசமானம் வஸுதேவ ஐக்ஷத"</b><br />
<b> ஸ்ரீமத்பாகவதம் 10-3-9,10</b><br />
<br />
மேற்சொன்ன ஸ்லோகங்களின் அர்த்தம், சிறையிலிருந்த வஸுதேவருக்கும் தேவகிக்கும் பகவான் காட்சியளித்த திருக்கோலத்திலேயே குருவாயூரில் இந்த ஸ்லோகத்தின் படி இன்றும் நமக்காகக் காட்சியளிக்கிறான் பகவான்.<br />
<b><br /></b>
கலியில், கிருஷ்ணன் ஸ்ரீமத் பாகவதத்தில் தான் இருப்பதாக உத்தவருக்கு கூறியுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குருவாயூரப்பனிடம் சரணடைவோம் பாகவத பாராயணம் மற்றும் கதா ஸ்ரவணத்தில் திளைத்து பிறவிப்பெருங்கடலை நீந்துவோமாக.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாராயண நாராயண....</div>
<div style="text-align: justify;">
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-75001150983755010352020-06-29T13:30:00.000+05:302020-06-29T19:22:15.398+05:30வர்ஷா என்ற மழை மேகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வணக்கம் நண்பர்களே,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் எனது ஆறாம் வகுப்பில் இருக்கும்போது மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்து வலது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு வீட்டிலேயே ஒரு மாத காலம் இருந்தேன்.</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அது பள்ளி திறந்து முதல் மாதமான ஜுன் மாதம். எனது ஐந்தாம் வகுப்புத் தோழர்கள் நவீன் இனி வரப்போவதில்லை என நினைத்து விட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐந்தாம் வகுப்பில் வர்ஷா என்ற பொன்னு புது அட்மிஷன் ஆச்சு.ஐந்தாம் வகுப்பிலேயே நல்லா பழகிவிட்டோம். "Iam Varsha from Trivandrum" என அவளே தன்னை அறிமுகம் செய்துகொண்டு என்னோடு நட்பாக இருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாங்களிருவரும் க்ரூப் ஸ்டடிலாம் வகுப்பில் பண்ணுவோம். அவள் என் மண்டையில் நச்சென கொட்டுவாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்குத் தான் கணக்கு வராதே. கணித டீச்சர் சலோமி டீச்சர் என்னை வகுப்புத் தலைவர் ஸௌமியாவிடம் கணக்கு கத்துக்க சொன்னார். ஆனால் ஸௌமியா சலோமி டீச்சரிடம் நவீன் வர்ஷா கிட்டதான் படிப்பான் என சொல்ல, டீச்சர் வர்ஷாவின் வசம் என்னை ஒப்படைத்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏற்கனவே வர்ஷாவுக்கு எனக்கு அறிவியலை கற்றுத் தரும் பொறுப்பும் இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வர்ஷா தான் க்ரூப் லீடர். அவளிடம் என்னை தவிர மூன்று பேர் இருந்தனர்.ஆனால் அவள் என்மேல் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை கண்டு பொறுக்காத மற்ற க்ரூப் ஆண் மாணவர்கள் டீச்சரிடம் போய் கம்புளைன்ட் பண்ணிட்டாங்க.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வர்ஷா நவீன மட்டும் தான் கேர் எடுத்துக்கறா எங்களை எல்லாம் கண்டுகொள்வதில்லை என சலோமி டீச்சரிடம் கூறிவிட்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
டீச்சர் வர்ஷாவை தனியாக அழைத்து அவளிடம் இது பற்றி பேசியுள்ளார். அதற்கு அவள் நவீன் தான் ரொம்பா வீக்கா இருக்கான் அவனுக்கு தான் எக்ஸ்ட்ரா கேர் தேவ என டீச்சரிடம் கூறிவிட்டாளாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின், சலோமி டீச்சர் அவளிடம் இருந்த மற்ற மாணவர்களைப் பிரித்து விட்டு வர்ஷா முழுக்க முழுக்க என்னை கேர் எடுத்துக்க உத்தரவு போட்டாங்க.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த உத்தரவு ஹாப் இயர்லி தேர்வுகளுக்கு முன்னால் போடப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேர்வுகள் எல்லாம் நடந்து,அதற்கு ப்ரிபேர் செய்வது என நாங்கள் இருவரும் பிஸியாகப் படித்தோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதே போல் ஐந்தாவது முழுக்க ஜாலியா இருந்தது. நானும் அறிவியல் மற்றும் கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற்றேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது படிப்பில் முன்னேற்றம் தெரிந்ததால் சலோமி டீச்சர் என்னை வர்ஷாவிடமே படிக்கச் சொல்லிவிட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவள் என்னை திட்டுவாள், அடிப்பாள் எல்லாம் செய்வாள். இன்டர்வெல்ல எனக்கு ஸ்னாக்ஸ் கூட குடுப்பா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜாலியா இருந்தேன். படிக்கவும் செய்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருவழியாக, ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பு தொடங்கியது. நான் கால் முறிந்து வீட்டில் இருந்த சமயத்தில் எவனோ ஒரு அயோக்கியன் வர்ஷா விடம் நவீன் இனிமே ஸ்கூல்கு வரமாட்டான் அவன் வேற ஸ்கூல்ல சேர்ந்துட்டான்னு சொல்லிட்டான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவ அன்னிக்கு ஃபுல்லாக அழுத்துட்டே இருந்தாளாம். வகுப்புல காய்ச்சல் னு சொல்லி ரெஸ்ட் எடுத்தாளாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வர்ஷாவிற்கு என்ன ஆச்சு என ஆறாம் வகுப்பிலும் எங்களுக்கு கணிதத்திற்கு வந்த சலோமி டீச்சர் மற்ற மாணவிகளிடம் விசாரிக்க சிந்து உண்மைய டீச்சர் கிட்ட சொல்லிவிட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின், வர்ஷாவை தனியாக அழைத்து சலோமி டீச்சர் பேசுனாங்களாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நவீனுக்கு கால் ஃப்ரேக்சர் ஆகியிருக்கு இன்னும் ஒரு வாரத்துல நவீன் ஸ்கூல்க்கு வந்துருவான் என அவளிடம் சமாதானம் கூறினார்களாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு மாத ரெஸ்ட் முடிந்து நான் எனது மொழுக் மொழுக் உடலுடன் ஆறாம் வகுப்பிற்கு முதல் நாள் சென்றேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலில் கட்டுடன் என்னை கண்ட வர்ஷா அழுது விட்டாள். அதுவும் காலை தொங்க போடாமல் நீட்டி வைக்க மருத்துவரின் பரிந்துரையிருந்ததால் நான் வகுப்பில் காலை நீட்டித்தான் அமர்ந்திருப்பேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வர்ஷா எனக்காக எல்லா வகுப்புச் செயல்களையும் செய்தால் எனது ரெக்கார்ட் கூட அவளே செய்தால்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிட்டதட்ட ஒன்றரை மாத நோட் வர்கை எல்லாம் அவளே செய்தால். ஆறாம் வகுப்பிலும் எனக்குத் துணையாக இருந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜுலை மாதம் எனக்கு கட்டு பிரித்து நான் பழையபடி நார்மலா பள்ளிக்கு வந்ததைக் கண்டு அவளுக்கு மிகுந்த சந்தோஷம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்கூல் கேன்டீன்னில் இருந்து எனக்கு பிஸ்கட், போன்டாலாம் வாங்கித் தந்தாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால், நான் இப்போது போல அப்போதும் கஞ்சப் பயதான். அவளுக்கு ஒரு ஸ்னாக்ஸ் கூட கொடுத்ததில்லை.</div>
<div style="text-align: justify;">
அவளும் எதையும் எதிர்பார்க்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்கள் பள்ளி ரொமன் கெதொளிக்கை சார்ந்த ஒன்று.எனவே அடிக்கடி பிரார்த்தனை கூட்டமானது பள்ளியின் அருகில் செயல்படும் தேவாலயத்தில் நடைபெறும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது வர்ஷா கொயர் குரூபில் இருந்தாள்.அவள் நன்றாகப் பாடுவாள். அதனால் அவளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வர்ஷா மலையாள ப்ராமின். ஆனால் அவளின் பாடும் திறமையால் அவளை கொயர் குழுவில் சேர்த்துக்கொண்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவளும் நன்றாகவே பாடினாள். பாடி முடித்து வகுப்பிற்கு வந்தவுடன் என்னிடம் தான் நன்றாக பாடினேனா என்ற சான்றிதழைக் கேட்டு நச்சரிப்பாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாடலை கவனிக்காமல் இருந்தாலும் அவளுக்காக நன்றாகப் பாடினாய் என கூறுவேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி கூறுகையில் ஒருநாள் நீ நன்றாகப் பாடினாய் என வழக்கம் போல் பழக்கதோஷத்தில் சொல்லிவிட்டேன்.</div>
<div style="text-align: justify;">
அன்று பார்த்து அவள் கொயரில் பங்குபெறவேயில்லை என்பது எனக்கு தெரியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிறகென்ன, வழக்கம் போல் தலையில் கொட்டு வாங்கினேன். ஆறாம் வகுப்பில் வர்ஷாவிடம் எனக்கிருந்த அன்பு மெதுவாகக் காதலாக மாறியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவள் மேல் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினேன். க்ரூப்பில் அமர்ந்து படிக்கும் போது அவளிடம் சில குறும்புகள் செய்ய ஆரம்பித்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவள் அதையும் பொருட்படுத்தாது, நீ இந்த முறை கணிதத்தில் பாஸ் ஆனால் உனக்கு பரிசு தருவேன் எனப் பாசத்தை கொட்டினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆறாம் வகுப்பு முழுத் தேர்வுகள் முடிந்து இறுதி நாளன்று நண்பர்கள் பிரியும் வேளையில் வர்ஷா என்னிடம் சரியாகப் பேசவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நானும் சரி விடுமுறை முடிந்து பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை யிலிருந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விடுமுறை முடிந்து ஏழாம் வகுப்பிற்கு நான் வரும் போது நவீன் நவீன் என அன்போடு அழைக்கும் அந்த குரலைத் தேடினேன். கேட்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏழாம் வகுப்பு முதல் நாளன்று காலை இடைவேளையில் தீபிகா வந்து என்னிடம் வர்ஷா வராததற்கான காரணத்தைக் கூறினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த காரணம், வர்ஷாவின் அப்பாவிற்கு பணியிடமாற்றமானதால் வர்ஷாவின் குடும்பம் திருவனந்தபுரத்திற்கே சென்றுவிட்டார்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைக் கேட்டவுடன் இதயம் கணத்தது. ஏமாற்றத்தின் உச்சியில் இருந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வர்ஷா ஏதேனும் கூறினாளா என தீபிகாவிடம் கேட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்கு அவள், வர்ஷா விசியத்தைக் தன்னிடம் கூறும்போது அழுததாகக் கூறினாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்கும் கண்களில் நீர் கோர்த்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இடைவேளை முடிந்து வகுப்புத் தொடங்கியது.அடுத்த இரண்டு நாட்கள் மிகுந்த வருத்தமாக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மூன்றாவது நாள் வந்தாலொரு ஆங்கிலோ-இந்தியன் தேவதை ஜோஸ்பின் அனிதா ரோடியஸ் என்று.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
ஜாலிலா ஜும் கானா ஜான்சன்...</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அப்புறம் என்ன.ஏழாம் வகுப்பில் நூறு சதவிகித வருகை பதிவிற்கு பரிசு பெற்றேன். நண்பர்களே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-67263674020113624442020-06-27T10:16:00.000+05:302020-06-27T11:15:36.486+05:30சூடி கொடுத்த சுடர்கொடி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
வணக்கம் நண்பர்களே,</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
இன்று நாம் கோதை நாச்சியாரைப் பற்றி பார்ப்போம். ஆண்டாள் என்ற திருநாமத்துடன் பிரசித்தமாக விளங்கும் கோதை ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயி பெருமாளின் சந்நிதியருகே அமைந்த துளசி வனத்தில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தார்.<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவரை விஷ்ணுசித்தரான பெரியாழ்வார் எடுத்து வளர்த்தார்.அவர் பூமி தேவியின் அம்சம். பெருமாளின் பிராட்டிமார்களின் ஒருவர் தான் பூதேவி. இந்த பூதேவி தான் பூமாதேவி என்றும் விளங்குகிறாள்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
கோதை நாச்சியாரின் அவதாரத்திற்கு ஓர் காரணமுண்டு. அக்காரணத்தை நாமறிந்தால் ஆண்டாளை பற்றின புரிதல் இன்னும் வலுப்பெறும்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
கஷ்யபர் என்ற ரிஷிக்கு அதிதி மற்றும் திதி என்று இரண்டு மனைவியர் இருந்தனர்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவர்களில் திதிக்கு இரண்டு அசுர பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் இரண்யாக்ஷன் மற்றும் இரண்யகசிபு.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
இவர்களில் மூத்தவன் இரண்யாக்ஷன், கடுந்தவமியற்றி ப்ரம்மனிடம் பல வரங்களைப் பெற்று அதன் மூலம் கர்வம் கொண்டு பூமியை ஓர் பாய் போல சுருட்டி பாதாள லோகத்தினுள் சிறை பிடித்தான்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
பூமி தேவி ப்ரம்மாவிடம் முறையிடவே வரமளித்த ப்ரம்மன் மஹாவிஷ்ணுவை தியானித்தார்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
தியானத்தில் இருந்த ப்ரம்மாவின் மூக்கிலிருந்து ஓர் சிறு பன்றி யொன்று குதித்தது. அது கட்டைவிரல் அளவே இருந்தது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
பின், ப்ரம்மன் அதைப் பார்க்க பார்க்கவே மிக பெரிய வராகமாய் அது மாறியது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
முனிவர்களும், ப்ரம்மதேவனும் அந்த பன்றியின் தாமரைக்கண்களைப் பார்த்து இது மஹாவிஷ்ணுவே என அறிந்து பலவாறு துதிசெய்தனர்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
தாமரைக்கண்கள் பரதேவதையின் ஓர் அடையாளம். எந்த அவதாரத்திலும் இந்த அடையாளம் மாறாது. </div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
மஹாவராஹம் இரண்யாக்ஷனுடன் போர் செய்து அவனை வதைத்து பூமி தேவியை மீட்டு வெளிவந்தது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
தனது மனைவியான பூமிதேவியை பெருமாள் தனது இடது தொடையில் அமர்த்திக் கொண்டு காட்சியளித்தார்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அப்போது பூமிதேவி பூமியில் வாழும் தனது பிள்ளைகளின் மேல் அக்கறை கொண்டு அவர்கள் பரமனை எளிதில் அடைய வழியை அருளுமாறு பெருமாளிடம் கேட்டார்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
பெருமாள் நல்லதோர் உபாயத்தை உபதேசிக்கலானார். வராஹ மூர்த்திக்கும் பூமிப் பிராட்டிக்கும் நடந்த விவாதம் ' வராஹ புராணம்' என விளங்குகிறது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
இதில் பெருமாள் தன்னை மக்கள் எளிதில் அடைய அருளிய மிக முக்கியமான ஸ்லோகம் ஒன்றுள்ளது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
" <b>ப்ரோக்தம் ஸ்வஸ்ய ச கீர்த்தனம் ப்ரபதனம் ஸ்வஸ்மை ப்ரசூணார்பணம்</b>"</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
இதன் அர்த்தம்,</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
"தூமலர் தூவி தொழுது, வாயினால் பாடி,மனத்தினால் சிந்திக்க" என்று அர்த்தம்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அதாவது இறைவனை அடைய அவனை பாடி, அவனைப் பற்றி சிந்தித்து அவனை துதிப்பது என்பதாகும்</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
இந்த சமஸ்கிருத ஸ்லோகத்தின் பொருளை தமிழ் மக்களிடம் உபதேசிக்கவே பூமிதேவி கோதையாக அவதரித்து,</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
தானருளிய திருப்பாவையின் ஐந்தாம் பாசுரத்தில் இந்த செய்தியை வைத்தாள்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
என்றோ கிருத யுகத்தில் வராக பெருமாள் உபதேசித்ததை நம் மேல் கருணை கொண்டு கலியில் கோதையாக அவதரித்து நம் தமிழில் அந்த இறைவனையடையும் மார்க்கத்தை உபதேசித்துள்ளாள் கோதை. </div>
<div style="text-align: justify;">
இதுவே கோதையின் அவதார காரணம். மேலும் கோதை திருவரங்கநாதனை கைபிடித்த போது அவளின் வயது ஐந்து.</div>
<div style="text-align: justify;">
ஐந்து வயது பிள்ளை பக்தியின் முதிர்வால் இறைவனை அடைந்தது. இதை உலகியல் கணவன் மனைவி உறவோடு இணைத்துப் பேசுவது அர்த்தமற்ற செயலாகும்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
இதையறியாமல், தற்கால எழுத்தாளர்கள் சிலர் ஆண்டாளை ஏதேதோ உலகியல் விஷயங்களில் சம்பந்தப்படுத்தி எழுதுவது வருத்தமளிக்கிறது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
ஆனால், ஆண்டாள் ஒளிரும் சூரியன் அதனை அஞ்ஞானமாகிய சில மேகங்கள் சூழ்ந்தாலும் அதன் ஞானமாகிய ஒளி மங்காது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
ஆண்டாள் திருவடிகளே சரணம்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-86883652044159184262020-06-22T11:13:00.002+05:302020-06-22T13:23:12.142+05:30சொற்களஞ்சியம்- vocabulary<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வணக்கம் நண்பர்களே,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆங்கிலம் சரளமாகப் பேச அடிப்படையான சில விஷயங்களை பார்த்தோம். அந்த வரிசையில் அடுத்து வருவது சொற்களஞ்சியம்.<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதாவது ஆங்கிலத்தில் நமக்கு எவ்வளவு சொற்கள் தெரியும் என்பது தான் விஷயமே. மொழியை சரளமாக பேசுவதற்கு சொற்கள் அவசியம். ஆங்கில அகராதி இதற்கு பெருமளவு உதவி செய்யும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பலரும் ஆங்கில அகராதியை வைத்துள்ளனர் ஆனால் அதை பயன்படுத்தும் முறையில் தான் குழப்பமுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆங்கிலத்தை பொருத்தவரை அகராதி என்பது ஒரு Reference material.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்படி கணிதத்திற்கு log book என்பதோ அதே போல் தான் ஆங்கிலத்திற்கு அகராதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதை மனப்பாடம் செய்ய நினைப்பது வீணான செயல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாறாக, அதன் பயன்பாட்டையும், அதனை உபயோகப்படுத்தும் முறையையும் இங்கு காண்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆங்கில அகராதி என்பது ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதியாக இருப்பது ஆங்கில மொழி கற்பவருக்கு உதவியாக இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆங்கிலம்-பிறமொழி அகராதிகள் பெரும்பாலும் மொழிபெயர்பாளர்களால் பயன்படுத்தப்படுவதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கு உதவுவது வாசிப்புப் பழக்கம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாசிப்புப்பழக்கமுள்ளவர் தான் வாசிக்கும் புத்தகங்கள் அல்லது ஏதோவொரு சொல்லிற்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் ஆங்கில-ஆங்கில அகராதியில் அந்த சொல்லைத் தேடி அதற்கான பொருளைப் பெறலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுவாக ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக்கே பல வித அர்த்தங்கள் இருக்கும். உதாரணமாக, 'Reservations' என்னும் சொல்.இந்த சொல்லானது நாம் பொதுவாக அறிந்த முன்பதிவு என்ற அர்த்தத்தில் வரும் ஆனால் அதற்கு வேறொரு அர்த்தமும் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'Reservations' என்ற சொல் சந்தேகங்களையும் குறிக்கும்.இது போல் அனேக சொற்கள் ஆங்கில அகராதியில் உள்ளன.அந்த சொல்லிலுள்ள எல்லா அர்த்தங்களையும் பார்த்து விடவேண்டும்.அகராதியில் அந்த சொற்களின் பயன்பாட்டையும்(usage) பார்த்து விட வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின் அந்த சொல்லின் உச்சரிப்பை சரியாக கற்றுக்கொள்ள வேண்டும். அந்த சொல்லை மீண்டும் எங்காவது பயன்பாட்டில் காணும் போது அந்த சொல் மற்றும் அதன் பயன்பாடு நன்றாக மனதில் பதிந்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வாறாக இச்செயல்பாடு தொடர, நிறைய சொற்களை கற்றுக்கொண்டு நமது சொல்லாற்றலைப் பெருக்கலாம். சொற்களின் அர்த்தங்களைச் சரிவர புரிந்துகொண்டு அதன் பயன்பாட்டையும் அறிந்து உபயோகிக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்போது உச்சரிப்பை மேம்படுத்த கணினி மிகுந்த உதவி செய்கிறது.</div>
<div style="text-align: justify;">
இதை பயன்படுத்தி நமது உச்சரிப்பை சரி செய்து கொள்ளலாம்.ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதியைத் தான் பயன்படுத்த வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தினமும் குறைந்தபட்சம் ஒரு சொல்லிற்காவது பொருள் தேட வேண்டிய சூழல் ஏற்படும். உடனே சமயத்தைப் பயன்படுத்தி ஆங்கில அகராதியை பிரட்டி அர்த்தம் அறிய வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி செய்கையில் சில சொற்களுக்கு அர்த்தம் மறந்து போவது போல் தெரியும் ஆனால் அப்போது மனதைக் தளர விடாமல் மீண்டும் அச்சொல்லின் அர்த்தத்தை புரட்டி பார்த்து வலுவூட்டுவது நல்லது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>Reading habit paves way for rich vocabulary</b>.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுவாக, நாளிதழ் வாசிக்கும் பழக்கமுள்ளவர்கள் தினமும் புதிய சொற்களுக்கு அறிமுகமாவார்கள். இதனால் நிறைய ஆங்கில சொற்களை நாம் தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும், சொற்களின் ஆற்றலை பெருக்க <b>Thesaurus</b> பயன்படுத்தலாம். சொற்களின் சமமான அர்த்தங்கள் தரும் வேறு சொற்கள் இதிலிருக்கும் synonyms என்று கூட இவ்வகை சொற்களைக் கூறுவார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது பேச்சாளர்கள், கட்டுரையாளர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரே சொல்லைப் பயன்படுத்துவதற்கு பதில் அதே அர்த்தம் தரும் பல சொற்களைப் பயன்படுத்துகையில் பேச்சின் ஆற்றல் சிறக்கும். கட்டுரைகளும் சுவாரஸ்யமாக இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த செயல்பாடுகளை முறைப்படி செயல்படுத்தினால் வெற்றி நிச்சியம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் சிலர் ஆர்வ மிகுதியில் ஓர் அகராதியை வாங்கி இரண்டு மூன்று நாட்கள் அதை பயன்படுத்திப் பார்ப்பர். பயிற்சி முறை இல்லாததால் கண்களைக் கட்டி காட்டில் விட்டது போல் தோன்றி நாளடைவில் பயிற்சியையே கைவிட்டு விடுவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேருந்தில் பயணிக்கும் போதோ, மருத்துவமனைகளில் அமர்ந்திருக்கும்போதோ அல்லது எங்கு வேண்டுமானாலும் நமக்கு புதுச் சொற்கள் கண்களில் படலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே அச்சொற்களைக் கவனமாக பதிவு செய்து நமது ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதியில் பார்க்கலாம்.சொற்களஞ்சியத்தைப் பெருக்குவோம், சொற்களில் விளையாடுவோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இறுதியாக, டாக்டர்.இராதகிருஷ்ணனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்.அவர் ஒரு நாள் ஒரு கல்லூரியில் மாணவர்களைச் சந்தித்த போது வேண்டுமென்றே ஒரு மாணவன் ஒரு கேள்வியைக் கேட்டானாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அக்கேள்வியானது," what is the difference between a school master and a station master?"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த கேள்விக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் அவர்கள் சற்றும் யோசிக்காமல் ஒரு சொல் விளையாட்டு விளையாடினாராம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவரின் பதில்," A station master <b>minds</b> the <b>train</b> and a school master <b>trains</b> the <b>mind</b>" என்று கூற அங்கிருந்தவர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பினராம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இது போல் நாமும் சொற்களில் விளையாடுவோமா நண்பர்களே?<br />
<br />
'ஆங்கிலம் கற்கலாம் வாங்க' தொடரில் இதற்கு முந்திய பதிவுகளைப் படிக்க:<br />
<a href="http://naveencbe.blogspot.com/2020/05/blog-post_27.html" target="_blank">நுனி நாக்கில் ஆங்கிலம்!</a><br />
<a href="http://naveencbe.blogspot.com/2020/06/blog-post.html" target="_blank">மொழிச்சூழல் இருக்க பயமேன்?</a><br />
<a href="http://naveencbe.blogspot.com/2020/06/blog-post_13.html" target="_blank">மொழித் திறன்</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-16098852033883285982020-06-20T10:28:00.000+05:302020-06-20T10:28:00.885+05:30சிதறி விழுந்த மழைத்துளிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div>
<div style="text-align: justify;">
வணக்கம் நண்பர்களே,</div>
<div style="text-align: justify;">
<br />
திருப்பதி மகேஷ் எனக்கு துளசிதரன் சார் எழுதிய 'காலம் செய்த கோலமடி' என்ற புதினத்தை எப்போதோ தந்திருந்தார்.<br />
<a name='more'></a></div>
<br />
<div style="text-align: justify;">
அதனை இந்த லாக்டவுன் சமயத்தில் தான் படிக்க முடிந்தது.</div>
<div style="text-align: justify;">
புதினம் படித்த போது மனித உறவுகளின் மகத்துவத்தை புரிந்துகொண்டேன்.இதோ அதன் விமர்சனம்.</div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
புதினத்தின் கதாபாத்திரங்கள் என்னை மதுரைக்கும்,மருதூருக்கும், திண்டுக்கல்லுக்கும் என்னை இட்டுச்சென்றன என்று கூறினால் அது மிகையாகாது.</div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
</div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
ஆஹா என்ன கதாபாத்திரங்கள்.அவர்தம் மனங்களில் தான் எத்தனை எண்ணங்கள்.அதிலும் அந்த எண்ணங்களை ஆசிரியர் படம்பிடித்து காட்டிய விதம் அருமை.ஆனால் ஜயலட்சுமி எனக்கு நடைமுறையில் இருந்து வேறுபட்ட ஒரு பெண்ணாகவே தெரிகிறாள்.லதாவின் வெறுப்பு நியாயமானதுதான்.அழகான கணவனையுடைய அனைத்து பெண்களுக்கும் இந்த வெறுப்பு இருக்கும். </div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
ஆனால் ஜெயலட்சுமி பின்னாளில் லதாவிற்கு உதவியது ஆச்சரியமாகவுள்ளது.ஒருவேளை லதாவின் மீனாட்சியும் சுந்தரேசனும் அருள்புரிந்த விதமோ தெரியவில்லை.கோபாலின் பாத்திரம் லதாவிற்கு எரிச்சலூட்டுவதாக இருந்தாலும்.அந்த உறவே அவளை பின்னாளில் தாங்குகிறது...நித்யா அதற்கு பாலமாக அமைத்திருப்பது அற்புதம்.காமத்தை காதலாக மாற்றிய குழந்தை நித்யா.என அருமையான கதாபாத்திரங்கள்.</div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
இந்த புதினத்தை வாசிக்கும் போது மிகவும் ஆர்வமாக இருந்தது.ஓர் அழகிய குடும்பம்.அந்த குடும்பத்தில் எத்தனை மாற்றங்கள்.அருமை.</div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
லதாவின் இனிய குடும்பம் இவ்வாறான மாற்றங்களை எதிர்கொள்ளும் என புதினத்தின் தொடக்க பக்கங்களை வாசிக்கும் போது உணர இயலவில்லை. பின் பகுதியில் அவ்வாறான மாற்றங்கள் நிகழத்தொடங்கியதும் ஆச்சர்யமாக இருந்தது. </div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
</div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
குழந்தைகள் இருவரும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக அமைந்திருக்கிறார்கள்.முப்பத்திமூன்று ஆண்டுகளுக்குப் பின் கோபாலை லதா சந்திப்பது ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு. காலத்தின் கட்டளை என்றும் தோன்றுகின்றது. துரைராஜை புரிந்து கொண்டு அவனை மணந்த ஜெயலட்சுமி ஒரு புதுமைப் பெண்.</div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
சாமித்தாத்தாவின் மறைவிற்கு பின் பல மாற்றங்கள்.நட்பை சரியாக தேர்வு செய்ய தூண்டும் போஸின் பாத்திரம் ஒர் 'ஆர்கிடைப்' என்றே கூறலாம்.நகர வாழ்க்கையையும் கிராம வாழ்க்கையையும் கண் முன்னே கொண்டுவந்துள்ளார் ஆசிரியர்.</div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
சத்தியமூர்த்திக்கு என்ன ஆனது என அறிய ஆவலாய் இருக்கிறது. போஸின் தாக்கம் கோபாலிடம் இருக்கும்போது ஏன் சத்திய மூர்த்தியின் தாக்கம் அவனிடத்தில் இல்லை என்ற கேள்வி எழுகிறது.</div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
ஒருவேளை தவறு செய்து வருந்தும் கோபாலின் நிலை சத்தியமூர்த்தியின் தாக்கமோ? </div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
கோபால் மற்றும் துரைராஜின் உருவ ஒற்றுமை. இறுதியில் இவையனைத்தும் காலத்தின் கோலமென ஆசிரியர் சொல்லிமுடிப்பது </div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
வியப்பை ஏற்படுத்துகிறது.இந்த புதினத்தை படிக்கும்போது ஆனந்தம்,வியப்பு,ஆச்சர்யம் என பல ரசங்கள் வெளிப்படுகின்றன.</div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="color: black;">
<div style="text-align: justify;">
இதுபோன்ற முக்கோண உறவுகள்,அதாவது லதா, துரைராஜ்,ஜெயலட்சுமி, இலக்கியத்தில் பல காலமாக இருந்துவருகிறது.கோபால் தனது கல்லூரி பேராசிரியர் கனவை விடுத்து எப்படி போலீஸ்காரனானான்? மணிகண்டனை போன்ற மிருகங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.அம்மிருகங்கள் பெண்ணின் பலவீனத்தை பதுங்கி அறிந்து பாய்கின்றன. விசாலியின் மாமனாரும் ஓர் மிருகமே.காமம் வலியது ,உயர்ந்த சிந்தனை கொண்ட மனிதனைக்கூட சில வினாடிகளில் மிருகமாகும் வல்லமை அதற்குண்டு. அன்று பார்த்தனின் தேர்தட்டில் மாயோன் உரைத்தது ஞாபகம் வருகிறது. பீஷ்மர், த்ரோணரை கூட அர்ஜுனா நீ ஒருகால் வென்று விடுவாய் ஆனால் காமத்தினின்றும்,க்ரோதத்தினின்றும் மீழ்வதே உண்மையான வெற்றி என்றான் பார்த்தசாரதி. எவ்வளவு உண்மை. ஆகமொத்தம், 'காலம் செய்த கோலமடி' வாசித்தது மகிழ்ச்சியளிக்கிறது.மேலும் யூ ட்யூபிலும் ஆசிரியரது சில நாடகங்களை பார்த்தேன். ஆம். பரசுராமக்க்ஷேத்திரமான மலைநாட்டின் இயற்கை அரவனைப்பில் இத்தகைய உயர்ந்த சிந்தனைகளைத் தவிர வேறென்ன தோன்றக்கூடும்.</div>
</div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-61720332914695470372020-06-19T10:29:00.000+05:302020-06-19T16:08:14.948+05:30திருப்பதி யாத்திரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வணக்கம் நண்பர்களே,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதுகலை நாட்களை பற்றி எழுதி வெகுநாட்கள் ஆகி விட்டது. எனவே இந்த பதிவில் திருப்பதியை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருப்பதி என்பது ஒரு புனிதமான நகரம். யுகம் யுகமாக உள்ள கோவில்கள் இங்கு உண்டு. பெரும்பாலும் திருப்பதி வருபவர்கள் திருமலையை மட்டும் அடைந்து பெருமாளை சேவித்துச் செல்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
திருச்சுகவனுர் என்ற திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஆலயம் பிரசித்தம். இங்கு தான் தாயார் அலர்மேல்மங்கையாக சேவை சாதிக்கிறார். எந்த வைணவ ஆலயங்களுக்கு சென்றாலும் தாயாரை வணங்கிவிட்டுத் தான் பெருமாளிடம் நாம் செல்ல வேண்டும். திருச்சானூர் பத்மாவதி தாயாரை சேவித்து விட்டு தான் திருமலையை அடைய வேண்டும் என்கிறது அன்னமாச்சாரியர் அருளிய 'ஸ்ரீ வேங்கடாசல மாஹாத்மியம்'. இது திருவரங்கத்தின் கோவிலொழுகிற்கு சமமான நூல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருப்பதியிலேயே புராதனமான ஆலயங்கள் மேலும் சில உள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலானது திருப்பதி ரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மிக பெரிய கோபுரத்துடன் காட்சியளிக்கும் திருப்பதி நகரின் பிரதானமான கோவில். இங்கு ஸ்ரீ கோவிந்த ராஜ பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் வரலாறு சற்று சோகமானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பதினோராம் நூற்றாண்டில், இரண்டாம் குலோத்துங்க சோழனால் சிதம்பரத்திலுள்ள கோவிந்த ராஜன் கோவில் சேதப்படுத்தப் பட்ட போது அங்கிருந்த மூலவர் மற்றும் உற்சவர்களை பகவத் ராமானுஜர் இங்கு சேர்ப்பித்து, அப்போதைய தொண்டை நாட்டு ராஜாவான யாதவராயனின் உதவியால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்பெருமாளுக்கு வைகானஸ ஆகமத்தின் படி பூஜைகள் நடைபெறுகின்றன.திருமலையில் நடப்பது போலவே அனைத்து உற்சவங்களும் நடைபெறுகின்றன. கோவிலில் ஸ்ரீ கோவிந்த ராஜ பெருமாள், பார்த்த சாரதிப் பெருமாள், ஸ்ரீ கல்யாண வேங்கடேஸ்வர பெருமாள், ஸ்ரீ ஆண்டாள் மற்றும் தனிக் கோவில் நாச்சியாராக ஸ்ரீ புண்டரிகவல்லி நாச்சியார் எழுந்தருளியுள்ளனர்.ஆழ்வார்களுக்கும் சந்நிதி உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருமலையில், பகவத் ராமானுஜரை தவிர வேறு யாருக்கும் சந்நிதியில்லை. இதன் காரணம் ஆழ்வார்கள் திருமலையையே பெருமாளாக கருதியதால் மலை மீது ஏறவில்லையாம். அதனால் ஆழ்வார்களுக்கு மலைதாழ்வரையிலே ஆழ்வார் தீர்த்தம் என்ற இடத்தில் சந்நிதியுண்டு. இவ்விடேமே தற்போது கபில தீர்த்தம் என்று காஞ்சி பீடாதிபதிகளின் முயற்சியால் சைவச் க்ஷேத்திரமாக விளங்குகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கோவிந்த ராஜ ஸ்வாமி சந்நிதியில் தான் அனைத்து ஆழ்வார்களின் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்து, ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி பெருமாள் ஆலயம். இவ்விடத்திலுள்ள பெருமாளை ராமாயண காலத்தில் ராமனுடன் வாழ்ந்த ஜாம்பவான் என்ற பாகவதர் ப்ரதிஷ்டை செய்ததாக தல வரலாறு கூறுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி ஆலயம் திருப்பதி நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.இங்கு மூலவர் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தி சீதா பிராட்டியுடனும் இளைய பெருமாளான லக்ஷமண ஸ்வாமியுடனும் எழுந்தருளியுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கும் வைகானஸ ஆகமத்தின் படி பூஜைகள் நடைபெறுகிறது.ஆச்சார்ய ஸ்தானத்தில் விளங்கும் ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமனின் சந்நிதிக்கு நேர் எதிரே தனிக்கோவில் கொண்டருளியுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கோவிலைச் சுற்றி அருமையான நந்தவனம், குளு குளுவென இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதையடுத்து, திருப்பதியிலிருந்து 12 கிலோ மீட்டர் மேற்கு நோக்கி பயணித்தால் 'ஸ்ரீ நிவாஸ மங்காபுரம்' இங்கு தான் பெருமாள் தனது கல்யாண கோலத்தை குறுமுனியான அகஸ்த்தியருக்கு காட்சியளித்த இடம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கு புகழ்பெற்ற சந்திரகிரி கோட்டையும் உள்ளது.ஸ்ரீ நிவாஸனின் கல்யாணத்தை காணாத அகத்தியர் பொதிகை மலையிலிருந்து நடந்தே திருமலைக்கு வரலானார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அகத்தியரின் வருகையை அறிந்த பரந்தாமன் அவருக்கு மலையேறும் சிரமத்தைத் தராது, குறுமுனி நின்ற இடத்திலேயே தரிசனம் அளித்தாராம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அது தான் ஸ்ரீ நிவாஸ மங்காபுரம். இங்கே பெருமாளின் திருநாமம் ஸ்ரீ கல்யாண வேங்கடேஸ்வர ஸ்வாமி. மேற்கூறிய அனைத்து கோவில்களும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படும் கோவில்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
இங்கே பெருமாளை தரிசனம் செய்து திரும்பும் வழியில் ஸ்ரீ வேங்கடேஸ்வரா மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது.</div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின், ஸ்ரீ நிவாஸ மங்காபுரத்திலிருந்து திருப்பதி வரும் வழியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாரால் நடத்தப்படும் ' கோசாலை'.இங்கு நிறைய பசுக்களும், காளைகளும் பராமரிக்கப்படுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் சிறப்பு வாய்ந்த ' ஓங்கோல் பசு' வின் பால் தான் ஸ்ரீ நிவாஸனின் திருமஞ்சனத்திற்கு வழங்கப்படுகிறது.அங்கு சென்றால் கோ சேவை செய்யலாம். பசும்பாலில் தயாராகும் பால்கோவா மளிவு விலையில் கிடைக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கிருந்து புறப்பட்டால் வழி நெடுக கல்வி நிலையங்கள் தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்ரீ வேங்கடேஸ்வர பல்கலைக்கழகம், ஸ்ரீ வேங்கடேஸ்வரா கல்லூரி என பாலாஜி காலனி வரை ஒரே கல்லூரி மயம் தான். ஸ்ரீ வேங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்கது.இது முழுக்க முழுக்க வேதங்களைக் கற்க,கற்பிக்க ஏற்படுத்தப் பட்ட பல்கலைக்கழகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கு சென்றால் வேதம் பயிலும் மாணவர்கள் வேதமோதும் சப்தம் செவிகளுக்கு விருந்தாக அமையும். இதெல்லாம் நாம் திருப்பதியில் பார்க்க வேண்டிய இடங்கள் நண்பர்களே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்த முறை திருப்பதி செல்லும் போது இவ்விடங்களையெல்லாம் பார்த்து, ஆன்மீகமும் இயற்கையும் நிறைந்த இன்ப பயணமாக நம் பயணங்கள் அமையட்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-39884768190338137322020-06-17T17:38:00.000+05:302020-06-17T17:38:35.190+05:30'துர்கா மாதா' மொழிபெயர்ப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வணக்கம் நண்பர்களே,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் ஊரடங்கு காலத்தில் ஒரு நாவலை மொழிபெயர்க்க நேர்ந்தது. இது ஊரடங்கிற்கான திட்டமிடல் கூட இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் நண்பர் திருப்பதி மகேஷுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன்.</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது அவர் தான் படித்த நாவல்களைப் பற்றிப் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது மகேஷ் 'துர்கா மாதா' என்ற தமிழ் நாவலைப் பற்றிச் சொன்னார். மேலும் அதனுடைய ஆங்கில வடிவத்தைக் காணவும் தான் ஆவலாகவுள்ளதாகக் கூறினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னை அதை மொழிப்பெயர்க்கவும் பரித்துரைத்தார். நானும் அதை ஏற்றுக்கொண்டதின் பெயரில் மகேஷ் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.</div>
<div style="text-align: justify;">
இவ்விடத்தில் மகேஷை பாராட்டியே ஆகவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மொழிபெயர்ப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்.குறிப்பாக அத்தமிழ் நாவல் என் கைகளில் கிடைக்கவும், அந்த எழுத்தாளருடன் நான் தொடர்பு கொள்ளவும் நிறைய உதவி செய்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மார்ச் 16 ம் தேதி எனக்கு நாவல் கிட்டியது. சில நாட்கள் கழித்து எனது வேலையைத் தொடங்கினேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்று மார்ச் 21, துர்கா மாதா நாவலின் முதல் பக்கத்தைப் படித்து அதை மொழிப்பெயர்த்து மாதிரி பிரதியை எழுத்தாளருக்கு காண்பிக்குமாறு மகேஷுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.</div>
<div style="text-align: justify;">
மகேஷ் அதை அவர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒப்புதல் கிடைத்த பிறகு மொழிபெயர்ப்பை தொடர்ந்தேன். நான் ஆரம்பித்த அதே நேரம் ஊரடங்குக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு நீடிக்க நீடிக்க நானும் நிறைய நேரம் நாவலை மொழிபெயர்க்க செலவிட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினமும் ஒரு அத்தியாயம் என்ற கணக்கில் மொழிப்பெயர்க்க திட்டமிட்டேன். அவ்வப்பொழுது சந்தேகம் ஏற்பட்டால் எழுத்தாளருடன் தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்பேன். ஒரு நாவலை மொழிப்பெயர்க்கும் போது அந்த நாவலின் எழுத்தாளருடன்,அதாவது அந்த சிந்தனைக்கு உரிமையானவருடன் தொடர்பிலிருப்பது நல்லதொரு மொழிபெயர்ப்பைத் தரும். காரணம் மொழிபெயர்ப்பவர் எக்காரணம் கொண்டும் தன் கருத்துக்களை அதில் புகுத்தக் கூடாது. எழுத்தாளரின் எண்ணத்தை அப்படியே வேறு மொழியில் எழுதித்தர வேண்டும். அவ்வளவுதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகவே, மகேஷ் செய்த உதவி தான் இந்த வெற்றிக்கு மூலகாரணம். எழுத்தாளர் ஜீவாவின் மின்னஞ்சலையும், அலைபேசி எண்ணையும் எனக்கு அனுப்பி வைத்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது நன்றி கலந்த அன்பை மகேஷுக்கு தெரிவிக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்து, நான் நன்றி கூற வேண்டியது தகவல் தொழில்நுட்பத்திற்கு தான் </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் இருப்பது கோவையில், மகேஷ் இருப்பதோ திருப்பதியில், எழுத்தாளர் ஜீவா வசிப்பதோ நாகர்கோவிலில். தூரங்களைப் பொருட்படுத்தாது சிந்தனைகளை இணைக்க உதவிய இணையத்திற்கு நன்றி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எழுத்தாளர் ஜீவா அவர்கள் நான் அழைக்கும் போதெல்லாம் சலிக்காமல் எனது சந்தேகங்களைப் போக்கி ஒரு நல்ல மொழிப்பெயர்ப்பு வெளிவர உதவியுள்ளார். அவர்களுக்கு நன்றி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருப்பூர் குணா அவர்களுக்கு எனது நன்றிகள், புத்தகம் என்னை அடைந்து விட்டது என்பதை உறுதி செய்ய அழைத்து அக்கறையுடன் விசாரித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புத்தகத்தை என்னிடம் பத்திரமாக,பவ்யமாக ஒப்படைத்த கொரியர் மேன் நடராஜுக்கும் எனது நன்றிகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
துர்கா மாதாவின் மொழிபெயர்ப்பை வாசித்து கருத்துக்கூறிய அரவிந்த்,நவரசன் மற்றும் இதர நண்பர்களுக்கும் நன்றி.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
புத்தகமானது எழுத்தாளர் ஜீவாவால் அமேசான் தளத்தில் மின்நூலாக(E- book) வெளியிடப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA0Oo3s19hKvdCDfep9uwlsZpZXxu_gUxDoFMnwTOmEyFMNv0-MbHNdPtl9HAAuRCJQvmS1UThJFU4681j6Ofzc5faHcbZzs9A83AghDErSEYygcK5nJfir1LUwsSdtwUGBnLDdLoEGGs/s1600/Screenshot_20200617-170835.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="800" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA0Oo3s19hKvdCDfep9uwlsZpZXxu_gUxDoFMnwTOmEyFMNv0-MbHNdPtl9HAAuRCJQvmS1UThJFU4681j6Ofzc5faHcbZzs9A83AghDErSEYygcK5nJfir1LUwsSdtwUGBnLDdLoEGGs/s320/Screenshot_20200617-170835.png" width="200" /></a></div>
<br />
<a href="https://www.amazon.in/dp/B08B5G6PX6/ref=cm_sw_r_em_apa_i_ZlG6EbJ7XW9TD" target="_blank"> DURGA MAATHA:The protector of social justice</a><br />
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இதில் எனது பெயரை பார்த்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அனைவரும் எனது இந்த முதல் மொழிபெயர்ப்பை படித்துக் கருத்துக் கூறுங்கள் நண்பர்களே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மடசாம்பிராணி நவீன் எப்போதும் இணையத்தில் தங்கள் மேலான கருத்துக்களுக்காக காத்திருப்பான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-41585503074723063812020-06-16T11:46:00.001+05:302020-06-16T14:14:16.551+05:30கண்ணிநுன்சிறுதாம்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வணக்கம் நண்பர்களே,</div>
<div style="text-align: justify;">
</div>
<br />
<div style="text-align: justify;">
சென்ற வைணவம் பதிவில் நாலாயிரத்தை பெற்றுக் கொடுத்த <a href="http://naveencbe.blogspot.com/2020/06/blog-post_10.html" target="_blank">ஸ்ரீமந் நாதமுனி</a>களின் சிறப்பைப் பார்த்தோம். இப்பதிவில் நாதமுனிகள் உருச்சொன்ன 'கண்ணிநுன்சிறுதாம்பு' என்ற பதினோரு பாசுரங்களைப் பற்றிப் பார்ப்போம்.</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாதமுனிகள் ஏன் அதை 12000 முறை உருச்சொன்னார். எவ்வாறு நம்மாழ்வாருடன் 'கண்ணிநுன்சிறுத்தாம்பு' தொடர்புடையது என்பதை இப்பதிவில் காணலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்மாழ்வார் திருவவதாரம் செய்ததோ இப்புவியில் கண்ணன் தனது அவதாரத்தைப் பூர்த்தி செய்து ஸ்ரீ வைகுண்டம் போனதிலிருந்து சரியாக இருபத்தியோரு நாட்கள் கழித்து அவதரித்தாராம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனில், கண்ணன் புறப்பட்டுச் சென்றவுடனே த்வாபர யுகம்முடிந்து கலியுகம் தொடங்கி விட்டது. ஆகையால் நம்மாழ்வாரின் அவதாரம் கலியுகத்தின் தொடக்கத்தில் ஏற்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்மாழ்வார் பிறவிலேயே ஞானியாகப் பிறந்தார். குருகூரில் ஆதிசேஷன் அம்சமாக விளங்கும் திருப்புளியாழ்வாரின் பொந்தில் குழந்தை தவமியற்றியது. 16 வருடங்கள் தவத்தில் கழித்த குழந்தை தற்போது வாலிபன். திருப்புளியாழ்வாரின் கீழ் தவத்தில் ஆழ்ந்திருக்கும் சடகோபனை பக்தர்கள் தரிசித்து செல்வர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த 16 ஆண்டுகளின் தப ஜ்வாலை ஆகாயத்தை தொட்டு பிரகாசித்தது. இன்னொரு சூரியன் என்று கூறினால் அது மிகையாகாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதுரகவியாழ்வார் நம்மாழ்வாருக்கு பல வருடங்களுக்கு முன்பு திருவவதாரம் செய்தவர். இவரின் அவதாரஸ்தலம் குருகூருக்கு அருகே திருகோளூர் என்ற வைத்தமாநிதிப் பெருமாளின் ஆஸ்தானம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதுரகவிகள் கண்ணன் வாழ்ந்த ஸ்தலங்களிலே அதாவது வடநாட்டிலே கைங்கர்யம் செய்து வந்தார். அப்போது அவர் தூய பெருநீரான யமுனையின் கரையில் கண்ணனின் நினைவோடு இருக்கையில் தெற்கே ஓர் பெரும் ஜோதி தெரிவதைக் கண்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அச்சோதியால் ஈர்க்கப்பட்டு தென் திசை நோக்கி பயணித்தார் அச்சோதி நீண்ட தூரம் தெற்கே சென்றுகொண்டே இருந்ததாம். ஒருவழியாக ஸ்ரீ ரங்கம் வந்து சேர்ந்த அவருக்கு வியப்பு மேலிட்டது. அச்சோதி மேலும் தெற்கே தெரிந்தது. அரங்கனை சேவித்து மேலும் தெற்கு நோக்கி விரைந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சோதியின் திசை நோக்கி பயணித்த மதுரகவியாழ்வார் தனதூரான திருகோளூரை அடைந்து வைத்தமாநிதியை மங்களாசாசனம் செய்து பின் அச்சோதியை தொடர அச்சோதி திருக்குருகூரில் நம்மாழ்வாரிடம் ஒன்றி மறைந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதுரகவியாழ்வார் தவத்தில் ஆழ்ந்த சடகோபனை வணங்கி நின்று அவரின் கடாக்ஷத்தைப் பெற, ஓர் கேள்வியெழுப்பினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
" செற்றதின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எத்தே கிடக்கும்?" என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சடகோபமாமுனி தன் தவத்திலிருந்து 16 வருடங்களுக்குப் பின் மீண்டு தன் தாமரைக்கண்களைத் திறந்து புன்முறுவல் பூத்து திருவாய் மலர்ந்து</div>
<div style="text-align: justify;">
ஞான சொல்லை உதிர்த்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
" அத்தை தின்று அத்தே கிடக்கும்" என்றார் நம்மாழ்வார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைக் கேட்ட மதுரகவிகள் ஆழ்வாரை வணங்கி தனக்கு உபதேசிக்க வேண்டினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செற்றது என்றால் இந்த ப்ரபஞ்சம். சிறியது என்றால் ஜீவாத்மா. இந்த ப்ரபஞ்சத்திற்கு ஜீவாத்மா வந்தால் ப்ரபஞ்சத்தில் கர்மங்களைச் செய்து இங்கேயே உழலும் என்பது இதன் அர்த்தமாக பெரியோருரைப்பர். செற்றது என்பது பகவத் விஷய ஞானம் ஏற்படாது இருப்பதைக் குறிக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்று தொடக்கமாக மதுரகவிகள் நம்மாழ்வாரோடு பதினாறு ஆண்டுகள் இருந்து அவரை தவிர வேறு தெய்வத்தை அறியாதவராக தன் ஆச்சாரியெனே எல்லாம் என இருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்நிலையில் நம்மாழ்வாரின் சிறப்பையும் அவரது கருணையையும் பதினோரு பாசுரங்களாகப் பாடினார். அப்பாசுரங்களில் தனக்கு பெருமாளைத் காட்டிலும் நம்மாழ்வாரே தனக்கு இனிமையானவர் என பாடுகிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பதினாராண்டுகள் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் பாசுரங்கள் அனைத்தையும் கையோலைபடுத்தினாராம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த பதினோரு பாசுரங்களைத் தவிர அவரேதும் பாடவில்லையாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தாதி வடிவிலிருக்கும் பாசுரங்கள் அனைத்தும் இனிமையானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாதனுக்கு நாலாயிரத்தை வழங்கியது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இன்றும் பல பக்தர்கள் கண்ணிநுன்சிறுதாம்பை மட்டுமே சேவிப்பது நாலாயிரம் பாசுரங்களையும் சேவிப்பதற்குச் சமமென நம்புகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்மாழ்வார் முப்பத்திரெண்டாண்டுகள் வாழ்ந்து பரமபதமடைந்த பின் மதுரகவிகளும் ஆழ்வரைத் தொடர்ந்து பரமபதித்தாராம்.</div>
<div style="text-align: justify;">
<br />
<blockquote class="tr_bq">
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்</blockquote>
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-19887845538085370372020-06-15T10:56:00.002+05:302020-06-15T11:34:20.215+05:30எதிர் வீட்டார் சந்தேகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வணக்கம் நண்பர்களே,<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://naveencbe.blogspot.com/2020/06/blog-post_6.html" target="_blank"> கெட்ட கொழுப்பு அதிகமாகவுள்ளதால்,</a> எனது உணவுமுறைகளிலும்,வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களை நடைமுறைபடுத்தியுள்ளேன்.</div>
<div style="text-align: justify;">
<a name='more'></a></div>
<br />
<div style="text-align: justify;">
இதன் விளைவாக நான் தினமும் காலையில் இரண்டு சப்பாத்தி அல்லது கோதுமை தோசை மதியம் கொஞ்சம் அரிசிச்சோறு காய்கறிகளுடன் மற்றும் இரவு மீண்டும் கோதுமை தோசையோ,சப்பாத்தியோ என சாப்பிட்டு வருகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலை 40 நிமிடங்கள் நடை பயிற்சி செய்கிறேன். 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கிறேன். இரவு உணவிற்குப் பின் வீட்டின் வெராண்டாவில் எட்டுப் போட்டு நடப்பேன். நடப்பேன் நடப்பேன் நடந்து கொண்டேயிருப்பேன் இரவு 10 மணிவரை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்கள் வீட்டின் எதிரில் ஒரு இரண்டடுக்கு கட்டிடமுள்ளது. அக்கட்டிடத்தில் மூன்று வீடுகள் இருக்கின்றன. மேலே இரண்டு வீடுகளும் கீழொரு வீடும் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலேயுள்ள இரண்டு வீடுகளின் ஒரு வீட்டில் ஓர் அழகிய பாவை வசிக்கிறாள். அளவான குடும்பம் தான். தாய் தந்தை மற்றும் அவள்.அவர்களது வீட்டுக்கதவு இரவு பத்தரை மணிவரை திறந்திருக்கும். மேலும் நாங்கள் எதிர்புறத்தில் கீழ் வீட்டில் வசிப்பதால் அவர்களது கதவு திறந்திருந்தால் இங்கு நன்றாகத் தெரியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போது என்ன பிரச்சினை என்றால் நான் இரவில் எங்கள் வீட்டு வெராண்டாவில் இங்குமங்கும் நடப்பது அவள் தந்தைக்கும் தாய்க்கும் என்மேல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலுமவள் நான் நடக்கும் போது அவர்களது ஹாலிலமர்ந்து கொண்டிருப்பது எரியும் தீயில் எண்ணெய்யையூற்றியுள்ளது. இப்போது அவர்கள் என்னை கண்காணிக்க ஆரம்பித்துவிட்டனர். காலை நான் எழுந்து வாசலுக்கு வந்தால் அவள் தந்தையின் முகத்தில் தான் விழிக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நேற்றும் இவ்வாறே ஆனது. அவரின் முகத்தில் விழித்த நேரமோ என்னவோ தெரியவில்லை நேற்று எங்கள் ச்சோக் பிட் நிரம்பிவிட்டது. அதை சரி செய்ய ஆளைப் பிடித்து சரி செய்து விடுவதற்குள் மதியம் மூன்றரை மணியானது. மொத்தம் இரண்டாயிரம் ரூபாய் செலவு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போது நான் அய்யனார் கோவில் பூதம் போல் ஒரு கையில் மமட்டி, மறுகையில் கடப்பாறை ஏந்தி நடந்து வந்தேன் அப்போது அவள் வெராண்டாவில் நின்று கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்த அந்நேரம் பார்த்து அவள் தந்தை வெளியே வந்து இங்கென்ன வேலை உள்ளே போ என அவளை அதற்றினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை கேட்ட நான் அதிர்ந்து போய் பாத்ரூமில் சரணடைந்தேன். கை கால்களை லைஃப் பாய் சோப்பு கொண்டு அலம்பி, மமட்டி மற்றும் கடப்பாறையைக் கழுவி வைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமையல் வாசனை கம கம வென இருந்தது. ஆனால் அது முன் வீட்டின் ஜன்னல் வழியாக வந்த வாசனை என்பதை விரைவில் அறிந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது கொழுப்பை கொல்ல என் அம்மா கொள்ளுப் பருப்பு செய்திருந்தார். நான் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தால் அவள் அம்மா அங்கு நின்று காவலிருந்தார். நான் கையில் டேபுடன் நாற்காலியைப் போட்டு வெராண்டாவில் அமர்ந்ததைக் கண்டு கோபமுற்று கதவை டமார் என சாத்திவிட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்கள் இருப்பது வாடகை வீடு என்பதால் கதவை அந்தப் போடு போடுகிறார். அடுத்தவன் முதலுக்கு தான் மனிதன் பங்கம் விளைவிப்பான்.</div>
<div style="text-align: justify;">
தனது பொருளாக இருந்தால் அதை பாதுகாப்பான் என்றெண்ணி நான் மொழிபெயர்க்கும் நாவலின் எழுத்துத் திருத்தங்களைச் செய்ய ஆரம்பித்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-83393162499953613652020-06-13T13:44:00.000+05:302020-06-13T13:51:04.919+05:30மொழித் திறன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
வணக்கம் நண்பர்களே,<br />
<br />
ஆங்கிலம் சரளமாகப் பேசுவது பற்றி நாம் சென்ற பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் பொதுவாக மொழித் திறன்களைப் பற்றி பார்ப்போம்.<br />
<a name='more'></a><br />
<br />
எந்த ஒரு மொழியில் நிபுணத்துவமடைய வேண்டுமானாலும் அதற்கு நான்கு அடிப்படை திறன்கள் தேவை.<br />
<br />
அவைதான், ஆங்கிலத்தில் சுருக்கமாக LSRW என்றழைக்கப்படும் அடிப்படைத் திறன்கள். ஒரு மொழியின் இந்த நான்கு வகை திறனை ஒருவர் பெற்றிருந்தால் தான் அவரை நாம் அம்மொழியில் அறிஞர் என்றழைக்கிறோம்.<br />
<br />
தற்போது வரிசையாக இந்த LSRW திறன்களைப் பற்றி பார்ப்போம்.<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>Listening skills</li>
<li>Speaking skills</li>
<li>Reading skills</li>
<li>Writing skills</li>
</ul>
<br />
<b>Listening skills</b>:<br />
<div style="text-align: justify;">
இது தான் மொழித் திறன்களில் முதன்மையானது.இந்த திறன் ஒருவர் குறிப்பிட்ட மொழியில் பேசும் போது அவர் சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன். இதை TOEFL, IELTS போன்ற அங்கீகரிக்கப்பட்ட தரமான தேர்வு முறைகள் பரிசோதிப்பதால்,தற்போது பல கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்த கல்லூரிகள் மட்டுமல்லாது பள்ளிகளிலும் மொழி ஆய்வகங்களை நிறுவி வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களோடு சில தனியார் மென் பொருள் நிறுவனங்களும் இணைந்து கணினி மற்றும் மென் பொருள் சேவைகளை வழங்குகின்றன. இதை நாம் அன்றாட வாழ்க்கையிலே செய்து விடலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்போது நம் அனைவரின் வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டியானது உள்ளது. அதில் பல ஒளியலை வரிசைகளும்(channels) உள்ளது. அவற்றில் சில செய்தி ஒளியலை வரிசைகள் வரும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உதாரணமாக ஆங்கிலத்தில் Listening திறனை மேம்படுத்த அந்த ஆங்கில செய்தி ஒளியலை வரிசையை தினமும் முப்பது நிமிடங்களாவது நாற்பது நாட்களுக்கு இடைவிடாமல் பயிற்சி செய்தால் ஆங்கிலத்தில் Listening திறனானது வளரும். இதே போல் தத்தமது மொழியை இவ்வாறு பயிற்சி செய்ய Listening skill வலுவுறும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Listening திறனானது அடுத்த பேசும் திறனுடன் தொடர்புடையது. ஒருவர் ஒரு மொழியில் எவ்வளவுக்கு எவ்வளவு கவனிக்கிறாரோ அவ்வளவிற்கவ்வளவு அம்மொழியில் நல்ல பேசும் திறனும் பெறுவார் என்பது மொழித்திறனாய்வு அறிக்கைகள் கூறும் உண்மை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>Speaking skills</b>:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்குத்தான் தற்போது மக்கள் வெகுவாக விழைகிறார்கள். ஆனால் சிலரே இதன் அடிப்படையையுணர்ந்து பயிற்சி பெற்றுப் பயன்பெறுகிறார்கள். ஆம் <a href="http://naveencbe.blogspot.com/2020/05/blog-post_27.html?m=1" target="_blank">நுனி நாக்கில் ஆங்கிலம்</a> பேச முறையான பயிற்சி அவசியம். தகுந்த <a href="http://naveencbe.blogspot.com/2020/06/blog-post.html?m=1" target="_blank">மொழிச்சூழலும்</a> இன்றியமையாததாகிறது. மொழியைப் பயில்பவருக்கு இந்த உலகமே ஆய்வுகூடமாகும். எங்கு வேண்டுமானாலும் திறன்களைப் பயிற்சி செய்யலாம்.<br />
<br />
ஒரு நல்ல பேச்சுத் திறன் கொண்டவர் நிச்சயமாக நல்ல Listening skill உள்ளவராகத் தான் இருக்க முடியும்.<br />
<br />
<b>Reading skills:</b><br />
<br />
மொழித்திறன் வரிசையில் அடுத்த முக்கிய பங்குவகிப்பது வாசிப்பு. நிறைய வாசிக்க வாசிக்க அம்மொழியின் சிந்தனைகள் மனதில் பதியும்<br />
Listening skill மற்றும் speaking skills பயிற்சியில்லாதவரும் கூட வாசிப்பு பயிற்சியால் அனைத்து மொழித் திறன்களையும் பெற்றுவிட இயலும்.வாசிப்பு என்பது புத்தகத்தை மட்டும் வாசிப்பதல்ல. அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விஷயங்களிலே நிறைய வாசிப்புப் பயற்சியுள்ளது.<br />
<br />
உதாரணமாக, ஒரு கோவிலுக்கு செல்கிறோம் என்றால் அங்குள்ள அறிவிப்புப் பலகைகள் மற்றும் தல வரலாறுகளைப் படிக்கலாம். பேருந்தில் பயணிக்கும் போது முன்னால் மற்றும் பக்கவாட்டில் செல்லும் வாகனங்களில் எழுதப்பட்டுள்ள வாசகங்களைக் படிக்கலாம், இப்படி வாசிப்பின் எல்லை விரிவடைந்து கொண்டேயிருக்கும். எனது தந்தை சிறு வயதிலேயே என்னை வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது வழியில் தென்படும் கடைகளின் பெயர்களை வாசித்துக் கொண்டே வா என்று கூறுவார்.<br />
<br />
இந்த பழக்கம் நாளடைவில் வாசிப்பின் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும் பள்ளிகளில் சில பத்திகளை வாசிக்கக் கொடுத்து வினாக்களைக் கேட்டு விடையெழுதச்சொல்வது என்பது இந்த வாசிப்புத் திறனை பரிசோதிக்கவே. வாசிப்பை நேசிப்போம் மொழியில் ஆற்றலைப் பெருக்குவோம். பொறுமை இருந்தால் நிறைய வாசிக்கலாம். பொறுமையை வளர்த்துக் கொள்வோம்.<br />
<br />
<b>Writing skills:</b><br />
<br />
இதை தற்போதைய காலத்தில்'typing skill'என சொல்லவேண்டுமோ? தெரியவில்லை. எழுதுவது என்பது மொழியில் சரளமாக எழுதுவதைத் குறிக்கும். இலக்கணம் மற்றும் கோர்வைப் பிழையின்றி எழுதும் திறன். இந்த திறனை மேம்படுத்தவும் ஒரு முறையுள்ளது. தினமும் முப்பது நிமிடங்கள் நாற்பது நாட்களுக்கு எதையாவது எழுதுவது தான். இப்படி பயிற்சி செய்தால் எழுத்துத் திறன் வளரும். பள்ளிகளில் 'composition' என்ற பெயரில் மாணவர்களை எழுதச் சொல்வது இதற்காகத்தான்.<br />
<br />
<br />
குறிப்பு: நல்ல வாசிப்புப் பழக்கமுள்ளவர் தானே நல்ல எழுத்தாளராகவும் திகழ்வார் என்கிறது ஆராய்ச்சிக் கட்டுரைகள்.<br />
<br />
அங்கீகரிக்கப்பட்ட மொழித் தேர்வுகளில் இந்த நான்கு திறன்களுமே பரிசோதிக்கப் படுகிறது.<br />
<br />
ஒரு மொழிப்பாட வகுப்பில் ஆசிரியர் இந்த நான்கு திறன்களிலும் மாணவர்களை பயிற்சி பெற செய்யவேண்டும்<br />
<br />
<br />
ஆகவே வாசிப்பு அவசியம். வாசிப்பிருந்தாலே அனைத்து மொழித் திறன்களும் வாய்க்கும்.<br />
<br />
நாமனைவரும் பொறுமையை வளர்த்துக் கொண்டு நிறைய வாசிப்போம் நண்பர்களே.</div>
<div style="text-align: justify;">
<br />
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<br />
<br />
<br />
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-56818494902830009532020-06-10T16:54:00.000+05:302020-06-10T23:04:22.545+05:30ஸ்ரீமந் நாதமுனிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 11.0pt;"> </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHUy9chL5HoGkj0OjvEc8GNMtGiaOFEKgxpxZssNqeS4c_cOJBahE1VFu3TP7Fn4uqBjB5rr0MsHeVlMJaNitxujjcPSinj9vy9oo2ue_OlIyP04SqjPoD2uz41XQeHlA4iAc3tpqHK1A/s1600/images.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="213" data-original-width="691" height="98" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHUy9chL5HoGkj0OjvEc8GNMtGiaOFEKgxpxZssNqeS4c_cOJBahE1VFu3TP7Fn4uqBjB5rr0MsHeVlMJaNitxujjcPSinj9vy9oo2ue_OlIyP04SqjPoD2uz41XQeHlA4iAc3tpqHK1A/s320/images.jpeg" width="320" /></a></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="mso-spacerun: yes;"> </span><span style="font-size: x-small; text-align: center;"> </span><span style="font-size: xx-small; text-align: left;"><span style="text-align: center;">ஸ்ரீ மதே ராமாநுஜாய நம: </span><span style="text-align: center;"> </span></span><br />
<div style="text-align: left;">
<span style="font-size: xx-small;"><span style="text-align: center;"> </span></span></div>
<div style="text-align: center;">
<div style="text-align: justify;">
<span style="text-align: left;"> </span></div>
</div>
</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="mso-spacerun: yes;"> </span><b style="text-align: center;"><span lang="TA" style="font-family: "latha" , sans-serif;">நம</span><span style="font-family: "latha" , sans-serif;">: </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif;">அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட</span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">ஜ்ஞான வைராக்ய ராஸயே</span><span style="font-family: "latha" , "sans-serif";"><o:p></o:p></span></b></div>
</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<div style="text-align: center;">
<b><span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்துவே</span><span style="font-family: "latha" , "sans-serif";">”<o:p></o:p></span></b></div>
</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<div style="text-align: center;">
<br /></div>
</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA"><a href="http://naveencbe.blogspot.com/2020/06/blog-post_43.html#more" target="_blank">ஸ்ரீமந் நாதமுனிகள்</a> கடலூர் மாவட்டத்திலுள்ள
சிதம்பரம் அருகில் அமைந்துள்ள காட்டு மன்னார் கோவில்</span>(<span lang="TA">எ</span>)
<span lang="TA">வீர நாராயணபுரத்தில் கி</span>.<span lang="TA">பி</span> 823<span lang="TA">ல் சோபகிருது வருடம் ஆனி மாதம்</span> 7 <span lang="TA">ம் தேதி புதன் கிழமை
பெளர்ணமி திதி கூடிய அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார்</span>.</span><br />
<a name='more'></a><span style="font-family: "latha" , "sans-serif";"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">இவர் ஸ்ரீ வைகுண்டத்திலிருக்கும் நித்யசூரியான</span><span style="font-family: "latha" , "sans-serif";"> “<span lang="TA">கஜாநநர்</span>” <span lang="TA">என்ற ஆனை முகத்தவரின் அம்சமாக பிறந்தார்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">இவரது பெற்றோர் இவருக்கு ஸ்ரீ ரங்கநாதன்
என்ற பெயரை வழங்கினர்</span>. <span lang="TA">இவர் முனிவர் போல யோக மார்கத்தில் சிறந்து
விளங்கியதால் இவரை அனைவரும் முனிவரென அழைத்தனர்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc4AP2JY-LUY7COiSiXyhSumhx2PTBYfxa2a-fEhyBVlpxk_8v1N3Ku3YpWuRqz8lZuDB9enxzDbXd9hEkoeezi8kS4u2dIKR0SB4FW_h_rO8NfkgAwaJSYVjfvhjgd_P4EqJZ3YaHZ60/s1600/nathamunigal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="549" data-original-width="598" height="293" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc4AP2JY-LUY7COiSiXyhSumhx2PTBYfxa2a-fEhyBVlpxk_8v1N3Ku3YpWuRqz8lZuDB9enxzDbXd9hEkoeezi8kS4u2dIKR0SB4FW_h_rO8NfkgAwaJSYVjfvhjgd_P4EqJZ3YaHZ60/s320/nathamunigal.jpg" width="320" /></a></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">நாதமுனிகள் தான் நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை
தொகுத்தருளியவர்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் அனைத்தும் காலத்தின் கொடுமையால்
உலகறியாமல் மறைந்து போனது</span><span style="font-family: "latha" , "sans-serif";">.
<o:p></o:p></span><br />
<span style="font-family: "latha" , "sans-serif";"><br /></span>
<span style="font-family: "latha" , "sans-serif";"> சுமார் 3500 வருடங்கள் ஆழ்வார்கள் காலத்திற்கும் நாதமுனிகள் காலத்திற்கும் இடையில் உருண்டோடின. </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">நாதமுனிகள் ஒரு முறை கும்பகோணத்திலுள்ள
ஆராவமுத பெருமாளை தரிசிக்க சென்றார்</span>. <span lang="TA">அங்கு பெருமாளை சேவித்துக்கொண்டிருந்த
இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆராவமுதனைக் குறித்த பத்துப் பாசுரங்களை பெருமாளின் முன் பாடிக்கொண்டிருந்தனர்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">அந்த பாசுரங்களின் இனிமையில் திளைத்த
நாதமுனிகள் அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களிடம் ஆயிரத்துள் இப்பத்தும் என்று பாடினீர்களே</span>,
<span lang="TA">ஏனைய</span> 990 <span lang="TA">பாசுரங்களையும் தாமிருவரும் அறிவீர்களா
என்று வினவ அதற்கவர்கள்</span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">நாங்கள் இந்த பத்துப் பாசுரங்களை மட்டுமே
அறிவோம் என்று கூறினர்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">நாதமுனிகள் அவர்கள் பாடிய கடைசி
பாசுரத்தைச் சற்று எண்ணிப்பார்த்தார்</span>. <span lang="TA">அதில்</span> ’<span lang="TA">குருகூர்ச் சடகோபன்</span>’ <span lang="TA">என்ற சொல்லை பிடித்து</span>, <span lang="TA">நம்மாழ்வாரின் அவதாரஸ்தலமான குருகூரையடைந்தார்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">அவ்வூரில்
நம்மாழ்வாரின் சிஷ்யரான மதுரகவியாழ்வாரின் சிஷ்ய பரம்பரையில் வந்த பராங்குச தாசரை சந்தித்தார்.
அவரிடம் நாதமுனிகள் தான் வந்த காரணத்தைக் கூறி, சடகோபர் அருளிய ஏனைய பாசுரங்களைக் கேட்டு
அவரின் உதவியை நாடினார். பராங்குச தாசர் நாதமுனிகளுக்கு ஒரு தகவலைக் கூறினார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>பராங்குச தாசர் தனக்கு நம்மாழ்வாரின் பாசுரங்கள்
எதுவும் தெரியாது எனவும். மேலும் நம்மாழ்வார் குறித்து மதுரகவியாழ்வார் அருளிய ‘கண்ணிநுன்சிறுதாம்பு’
பதினோரு பாசுரங்களையே தாம் அறிந்துள்ளதாகக் கூறினார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>மேலும், யோகத்தில் 12000 முறை இந்த கண்ணிநுன்சிறுதாம்பை
உருச் சொன்னால் நம்மாழ்வார் காட்சியளிப்பார் என்று தனது முன்னோர்கள் பகிர தாம் கேட்டிருப்பதாகவும்
கூறினார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>இதைக்கேட்ட நாதமுனிகள் 12000 முறை கண்ணிநுன்சிறுதாம்பை
உருச்சொல்ல முடிவெடுத்து நம்மாழ்வார் எழுந்தருளிய புளியமரத்தின் அடியிலமர்ந்து
12000 முறை கண்ணிநுன்சிறுதாம்பை உருச் சொல்ல ஆரம்பித்தார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>பராங்குச தாசர் கூறிய படியே நாதமுனிகளுக்கு நம்மாழ்வார்
யோகத்தில் தோன்றினார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>நாதமுனிகளுக்கு தாம் அருளிய திருவாய்மொழி
1102 பாசுரங்களை வழங்கினார். நாதமுனிகளுக்கு தனது ஏனைய பாசுரங்களையும் அருளியதோடு மற்ற
<a href="http://naveencbe.blogspot.com/2020/06/blog-post_43.html#more" target="_blank">ஆழ்வார்களின் பாசுரங்களையும்</a> அளித்தருளினார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>மேலும் பவிஷ்யதாச்சார்ய விக்ரஹத்தையும் நம்மாழ்வாரிடமிருந்து
நாதமுனிகள் பெற்றுகொண்டார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>இவற்றையெல்லாம் பெற்றுக்கொண்ட நாதமுனிகள் நம்மாழ்வாரை
வணங்கி அனைத்து ஆழ்வார்களின் பாசுரங்களையும் நாதமுனிகள் தனது சிஷ்யர்களான மேலையகத்தாழ்வான்,
கீழையகத்தாழ்வான் ஆகியோர் உதவியுடன் பண் சேர்த்து, தாளமிசைத்து தொகுத்தருளினார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>ஆகவே கண்ணிநுன்சிறுதாம்பு நாலாயிரத்தையும் பெற்றுக்
கொடுத்த பெருமையுடையது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>நம்மாழ்வார் திருவடிகளே சரணம்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-7159424760425566962020-06-09T18:52:00.000+05:302020-06-09T18:52:39.069+05:30 எனக்கு கணக்கு வராது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">அப்போது</span> 2010, <span lang="TA">நான் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதி
தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த காலம்</span>. </span><br />
<a name='more'></a><span style="font-family: "latha" , "sans-serif";"><span lang="TA">அப்போது எனக்கு கணிதத்தில்
நான் நிச்சயம் தேர்ச்சி பெறப் போவதில்லை எனத் தோன்றியது</span>. <span lang="TA">காரணம்
அவ்வருடம் வந்த வினாத்தாள்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">எனவே</span>, <span lang="TA">கூலி
வேலைக்காவது போய் பானை வயிற்றைக் கழுவிக் கொள்ளலாம் என எண்ணி வீட்டருகிலிருந்த ஓர்
தொழிற்சாலைக்குச் சென்றேன்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">அங்கு ஹெல்பர் வேலை கிடைத்தது</span>.
<span lang="TA">உழைப்பாளி பாட்டைப் பாடிக் கொண்டே எனக்கே உரிய தொள தொள ஆடையுடன் வேலைக்குச்
சென்றேன்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">தொழிற்சாலையில்</span>, <span lang="TA">பல ஊழியர்களுடன் உரையாடிக் கொண்டே வேலை செய்தேன்</span>. <span lang="TA">காலை
பத்து மணிக்கு வேலைக்குச் சென்ற நான்</span>, <span lang="TA">பிசிரை அள்ளும் வேலையைச்
செய்தேன்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">சக ஊழியர்கள்</span>, <span lang="TA">என்னை மேலே படிக்கக் கூறி அறிவுரை வழங்கினர்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";">”<span lang="TA">நீங்கள் எப்படியோ பன்னன்டாவது வரை வந்துட்டீங்க</span>, <span lang="TA">விடாம
படிச்சிருங்க</span>” <span lang="TA">எனக் கூறினார்கள்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">படிப்பின் மகிமை குறித்து அவர்கள் கூறினார்கள்</span><span style="font-family: "latha" , "sans-serif";">.<span lang="TA">வெய்யிலில் தான் நிழலின்
அருமை தெரியும்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">காலை</span> 11:30 <span lang="TA">மணியளவில்
டீ</span>, <span lang="TA">வடை வந்தது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">அரைமணி நேரம் இடைவேளை</span><span style="font-family: "latha" , "sans-serif";">.
<span lang="TA">வழக்கமாக பதினைந்து நிமிடம் தானாம்</span>. <span lang="TA">ஆனால் அன்று
உரிமையாளர் இல்லாததால் அரைமணி நேரம் ஆனது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">பின் எனக்கு ஒரு இரும்பு பெட்டிக்குப்
பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்தது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA"> குத்த வைத்துதமர்ந்து பெயிண்ட்டடித்தேன்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">மறுபடியும் இப்படியப்படியென ஒரு மணி நேரம் கழிந்து உணவு இடை
வேளை வந்தது</span><span style="font-family: "latha" , "sans-serif";">.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">வீட்டுக்கு சென்று உணவருந்திவிட்டு
மீண்டும் தொழிற்சாலைக்குச் சென்றேன்</span>. <span lang="TA">அங்கு மேற்பார்வையாளர் என்னை
அழைத்து பேசினார்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">அவர் என்னை வேலைகளைக் கற்றுக்கொள்ளுமாறு பணித்தார்</span><span style="font-family: "latha" , "sans-serif";">.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">நான் எனது பெயிண்ட்டடிக்கும் வேலையை
மாலை வரை தொடர்ந்தேன்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">மாலை ஐந்து மணி வரை வேலை செய்தேன்</span><span style="font-family: "latha" , "sans-serif";">. <span lang="TA">பின் வேலை முடியவே வீட்டுக்கு
புறப்பட்டேன்</span>. <span lang="TA">வீட்டுக்கு வந்தால் ஒரே தலைவலி</span>.<span lang="TA">அடுத்த நாள் வேலைக்குச் செல்லவில்லை</span>. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">மறுநாள்</span>, <span lang="TA">அந்த
தொழிற்சாலைக்குச் சென்று ஒரு நாள் வேலை செய்ததற்கு கூலி கேட்டேன்</span>. <span lang="TA">நூறு ரூபாய் கிடைத்தது</span>. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">அதை வாங்கிக் கொண்டு</span> ‘<span lang="TA">நான் கடவுள்</span>’ <span lang="TA">பட கேசட் வாங்க புறப்பட்டேன்</span>. <span lang="TA">போகும் வழியில்</span> ‘<span lang="TA">ஸ்ரீ பாண்டு ரங்க ருக்மிணி தியான மந்திர்</span>’
<span lang="TA">என்னும் பெயர்ப்பலகை கண்களில் பட்டது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">அங்கு சென்றேன்</span>. <span lang="TA">அது ஒரு கிருஷ்ணர் கோவில்</span>. <span lang="TA">ஒரு நபர் அமர்ந்திருந்தார்</span>.<span lang="TA">அவருக்கு வயதாகியிருந்தது</span>. ’<span lang="TA">ஸ்ரீமத் பாகவதம்</span>’
<span lang="TA">படித்துக் கொண்டிருந்தார்</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "latha" , "sans-serif";">அவர் என்னை பார்த்தவுடனே</span><span style="font-family: "latha" , "sans-serif";"> ’<span lang="TA">ஹரே கிருஷ்ணா</span>’ <span lang="TA">என்றார்</span>.<span lang="TA">நானும்</span> ’<span lang="TA">ஹரே கிருஷ்ணா</span>’ <span lang="TA">என்றேன்</span>.
<span lang="TA">அவரின் தூய சமஸ்கிருத உச்சரிப்பு என்னை ஈர்த்தது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">அவரருகில் அமர்ந்தேன்</span>. <span lang="TA">பாகவதத்திலிருந்து கதைகளைச் சொன்னார்</span>.<span lang="TA">இவ்வாறு எனது குருவை
சந்தித்தேன்</span>. <span lang="TA">பத்து வருடங்களாக இந்த குரு சிஷ்ய </span>உறவும் மாயோன் <span lang="TA">அருளால் தொடர்கிறது</span>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , "sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br /></div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-30798400346534517682020-06-07T21:35:00.003+05:302020-06-08T13:28:05.293+05:30ஆழ்வார் தமிழமுதம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHUy9chL5HoGkj0OjvEc8GNMtGiaOFEKgxpxZssNqeS4c_cOJBahE1VFu3TP7Fn4uqBjB5rr0MsHeVlMJaNitxujjcPSinj9vy9oo2ue_OlIyP04SqjPoD2uz41XQeHlA4iAc3tpqHK1A/s1600/images.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="213" data-original-width="691" height="98" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHUy9chL5HoGkj0OjvEc8GNMtGiaOFEKgxpxZssNqeS4c_cOJBahE1VFu3TP7Fn4uqBjB5rr0MsHeVlMJaNitxujjcPSinj9vy9oo2ue_OlIyP04SqjPoD2uz41XQeHlA4iAc3tpqHK1A/s320/images.jpeg" width="320" /></a></div>
<span style="font-size: x-small; text-align: center;"> </span><span style="font-size: x-small; text-align: center;"> </span><span style="font-size: x-small; text-align: center;"> </span><span style="font-size: xx-small;"><span style="text-align: center;">ஸ்ரீ மதே ராமாநுஜாய நம: </span><span style="text-align: center;"> </span></span><br />
<span style="font-size: xx-small;"><span style="text-align: center;"> </span><span style="text-align: justify;">ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்</span></span><br />
<div style="text-align: center;">
<div style="text-align: justify;">
<span style="text-align: left;"> </span></div>
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: x-small; text-align: center;"> </span><span style="text-align: justify;">ஸ்ரீமந் நாராயணன் தனது நிர்ஹேதுக க்ருபையால் மண்ணுலகில் வாழும் ஜீவாத்மாக்களை தன்னடியில் சேர்க்கத் திருவுள்ளம் கொண்டு யுகம் தோறும் அவதரிக்கிறான்.</span></div>
<a name='more'></a><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவ்வாறு செய்யும் அவதாரங்களால் அந்த அவதார காலத்தில் வாழும் ஆத்மாக்களை மட்டுமே காக்க முடிந்தது. மேலும் பரமாத்மாவான இறைவனே இறங்கி வருகையில் மானிடர்கள் அந்த அவதாரங்களில் பெருமையை உணரவில்லை. எனவே முள்ளை முள்ளால் எடுக்கப் பரமாத்மா தனது அம்சம் கொண்ட ஜீவாத்மாக்களையே அனுப்பினான்.அப்படி அவதரித்தவர்கள் தான் ஆழ்வார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
அவர்கள் தெய்வத் தமிழில் தங்கள் பக்தி வெள்ளத்தைப் பாய்ச்சிப் பைந்தமிழ் பாசுரங்களாகப் பாடினார்கள்.</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆழ்வார்கள் நம் தமிழ் மண்ணில் அவதரித்து திருமாலிடம் பக்தி பண்ணிகாண்பித்தார்கள். அவர்களின் ஈர சொற்களே நாலாயிரம் பாசுரங்களாக பின்னாளில் தொகுக்கப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவ்வாழ்வார்களைப் பற்றியும் அவர்கள் அருளிய பாசுரங்கள் குறித்தும் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆழ்வார்களின் பாசுரங்கள் தான் ஸ்ரீ வைணவ நெறியின் அடிப்படைப் ஆதாரம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்களில் மதுரகவியாழ்வாரையும் ஆண்டாளையும் தனி கோஷ்டியாகப் பிரித்து, ஆழ்வார்கள் பதின்மரெனவும் கூறுவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி வழங்கக் காரணம் மதுரகவியாழ்வார் மற்றும் ஆண்டாளின் ஆச்சாரிய பக்தியே யாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதுரகவியாழ்வார் தனது குருவான ஸ்ரீ நம்மாழ்வாரைத் தவிர யாரையும் ஏன், பெருமாளைக் கூட பாடவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆண்டாள் பெருமாளைப் பாடியிருந்தாலும் தனது தந்தையும் குருவுமான பெரியாழ்வாரை போற்றியே அனைத்து பாசுரங்களையும் பாடியுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே குருபக்திக்கு எடுத்துக்காட்டாக இவ்விருவரையும் விஷேசித்துத் தனித்துக் கூறுவதும் வழக்கம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பன்னிரு ஆழ்வார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கீழ்காணும் க்ரமத்தில் ஆழ்வார்கள் அவதரித்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்களது அருளிச்செயல்களும் கீழேவுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>பொய்கையாழ்வார்</b>:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதல் திருவந்தாதி - 100 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>பூதத்தாழ்வார்</b>:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டாம் திருவந்தாதி-100 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>பேயாழ்வார்</b>:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மூன்றாம் திருவந்தாதி-100 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>திருமழிசையாழ்வார்</b>:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருச்சந்த விருத்தம் -120 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்முகன் திருவந்தாதி-96 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>நம்மாழ்வார்</b>:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருவிருத்தம் - 100 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருவாசிரியம் - 7 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரிய திருவந்தாதி- 87 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருவாய்மொழி- 1102 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>மதுரகவியாழ்வார்</b>:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கண்ணிநுன்சிறுதாம்பு - 11 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>பெரியாழ்வார்</b>:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரியாழ்வார்திருமொழி-473பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>ஆண்டாள்:</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருப்பாவை - 30 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாச்சியார் திருமொழி - 143 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>குலசேகராழ்வார்</b>:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெருமாள் திருமொழி - 105 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b> தொண்டரடிப் பொடியாழ்வார்</b>:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருப்பள்ளியெழுச்சி - 10 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருமாலை - 45 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>திருபாணாழ்வார்:</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அமலனாதிபிரான் -10 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>திருமங்கையாழ்வார்</b>:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறிய திருமடல் - 40 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரிய திருமடல் - 78 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருக்குறுந்தாண்டகம் - 20 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருநெடுந்தாண்டகம் - 30 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருவேளுக்கூற்றிருக்கை - 1 பாசுரம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரிய திருமொழி - 1084 பாசுரங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவற்றுடன் திருவரங்கத்தமுதனார் இயற்றிய ராமாநுஜ நூற்றந்தாதி 108 பாசுரங்களும் சேர்த்து மொத்தம் நாலாயிரம் என விளங்குகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வனைத்துப் பாசுரங்கள் அடங்கியுள்ள தொகுப்பு 'நாலாயிர திவ்ய பிரபந்தம்' என அழைக்கப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை தொகுத்தருளியவர் நாதமுனிகளென விளங்கும் அரங்கநாத முனியாவார். இவர் ஒன்பதாம் நூற்றாண்டில் அவதரித்தவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்</div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-11855674550766459482020-06-06T20:23:00.000+05:302020-06-06T20:37:48.930+05:30கெட்ட கொழுப்பு அதிகமாயிருக்காமா!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வணக்கம் நண்பர்களே,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த ஒரு வாரமாக பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டேன்.</div>
<a name='more'></a><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஊரடங்கால் வீட்டில் தனித்திருந்த குறை தீர எனது சித்தி வீட்டிற்கு சென்றோம். அங்கு எனது மாமா அமர்ந்திருந்தார் அவரை நான் அங்கு எதிர்பார்க்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அவரின் ஆலோசனைகள் அனைத்தும் நன்றாகவே இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே அனைவரும் அமர்ந்து கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் எனக்கோ எனது மாமாவின் மீது பொறாமை. இவர் சொல்வதை நாமென்ன கேட்பது என்ற மனோபாவம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுவாகவே எனக்கு பிடிக்காத விஷயத்தில் தலையிட மாட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br />
எனவே, வேறொரு அறையில் நான் தனித்தமர்ந்து 'Hungry Shark' விளையாடிக் கொண்டிருந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீரருந்த வந்த நான் எனது தாயாரால் தடுக்கப் பட்டு அவர்களுடன் அமர்த்தப் பட்டேன்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
எனது மாமா தன்வந்திரியின் சீடர்களான அஸ்வினி குமாரர்களின் அருள் பெற்ற மருத்துவ மேதை போலும். அவரிடம் வசமாகச் சிக்கிக் கொண்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது உடல் பருமன் காரணமாக என்னை உடல் பரிசோதனை செய்ய சொன்னார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நானும் செய்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரிசோதனையின் முடிவுகள் மோசமாகவுள்ளது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கெட்ட கொழுப்பு அதிகமாகவுள்ளதாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்முடலிலுள்ள கொழுப்பின் அளவை அறிய செய்யப்படும் பரிசோதனை 'Lipid profile'என அழைக்கப்படுகிறது. இந்த பரிசோதனையின் முடிவில் நமக்கு நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவுகள் மதிப்புக்களாக வழங்கப்படும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவ்வாறு வழங்கப்படும் மதிப்புக்களில் மூன்று பிரிவுகள் இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அவையாவன,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<ul style="text-align: left;">
<li style="text-align: justify;">HDL</li>
<li style="text-align: justify;">Triglycerides</li>
<li style="text-align: justify;">LDL </li>
</ul>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் HDL என்பது நமது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவைக் குறிக்கும். நல்ல கொழுப்பு என்பது நமது உடலுக்குத் தேவையான கொழுப்பாகும். மேலும்,. எளிதில் கரையக் கூடியதுமாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Triglycerides என்பது நமக்கு சக்தி வழங்கக் கூடியதாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>LDL</b> தான் கெட்ட கொழுப்பாம். இந்த கொழுப்பு உடற்பயிற்சியினாலும், நடைபயிற்சியினாலும் கூட கரையாதாம். இதுதான் இருதய கோளாறுகளுக்கு வழிவகுக்கிறதாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்கு இந்த LDL லின் அளவுதான் அதிகமாகவுள்ளதாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாத்திரையைத் தவிர வேறு வழியில்லையாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே என்னை மாத்திரை சாப்பிடக் கூறி பரிந்துரைத்தார் அந்த நல்வுள்ளம் படைத்த மருத்துவ மேதை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போது நான்கு நாட்களாக மாத்திரை போட்டுக் கொண்டு இருக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கும், எனது உணவுப்பழக்கம் மிக எளிமையானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அசைவம் கிடையாது, துரித உணவுகள் கிடையாது</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மது கிடையாது. தினமும் காய்கறிகள், கீரைவகைகள் மற்றும் பழங்கள் தான் உண்டு வந்தேன். ஏன் இவ்வாறு நமக்கு ஏற்பட்டது என்று ஒரு வருத்தமுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த வருத்தம் நாளடைவில் மனவழுத்தமாக மாறிவிடுமோ வென பயமாகவுள்ளது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
பயமே நமது வயிற்றில் ஒரு வகையான அமிலத்தை சுறந்து நோயை ஏற்படுத்தவல்லது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதையெல்லாம் சிந்திக்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குருபவனபுராதீசனிடம் எனது பாரத்தை சமர்பித்து விட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புத்திக்கு எட்டாத சிலவற்றை தெய்வத்திடம் விட்டு விடுவதே நல்லது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-32358692424791999052020-06-05T20:27:00.000+05:302020-06-05T21:38:11.986+05:30மொழிச்சூழல் இருக்க பயமேன்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வணக்கம் நண்பர்களே,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆங்கில மொழியைச் சரளமாகப் பேச விரும்புபவர்களுக்கு இடைவிடாத பேச்சு பயிற்சி என்பது இன்றியமையாதது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆரம்பத்தில் அவர்கள் சில வாக்கியங்களை மனப்பாடம் செய்தோ அல்லது யோசித்தோ பேசுவார்கள்.<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் இங்கு ஓர் பிரச்சினையுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பயிற்சியாளர் ஏதேனும் உச்சரிப்பிலோ,வாக்கிய அமைப்பிலோ தவறு செய்ய நேரும். அப்போது சிலர் அதை பெரிய பிழையாக சுட்டிக்காட்டலாம். இதைக் கண்டு பயிற்சியாளர் தளர்ச்சியுறக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதனையோர் படிப்பினையாக ஏற்று, அத்தவறைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நேரத்தில் நமக்கு உதவுவது மொழியைப் பேசும் சூழல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உதாரணமாக, ஒரு தமிழ் நபர் வேலைக்காக வடநாடு சென்று அங்கு சிறிது காலம் தங்கினால் அந்த இடத்தில் பேசப்படும் மொழிச் சூழலில் அவர் ஈடுபடுகிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதையவர் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் இந்த மொழிச் சூழல் அவரை பாதிக்கும்..நாளடைவில் அவரது மனதில் அந்த மொழியின் நடைமுறைப் பேச்சு வழக்கு பதிய தொடங்கிவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி அந்த நபரிடம் ஊடுருவும் மொழி மெல்ல மெல்ல அவர் அதைப் பயன்படுத்துமாறு செய்விக்கும். இவ்வாறு பேசிப் பேசி அம்மொழி அந்த நபரிடம் சரளமாக விளையாடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதெல்லாம் சாதாரண மக்களுக்கே நிகழும் என்பதால் இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆங்கிலம் கற்பதிலும் இதையோர் முறையாக பயன்படுத்தலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றாக ஆங்கிலம் பேசும் மனிதர்களோடு நம்மை இணைத்துக்கொண்டு அவர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடுவது போன்றவை ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கு உதவும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போது இதை சரியாக புரிந்து கொள்ள ஒரு நிகழ்வைக் காண்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குழந்தையானது பிறந்தவுடனே பேசுமா? இல்லை பேசாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வளர வளர தான் பேசும். இங்கு ஒரு விஷயத்தை நாம் சிந்திக்க வேண்டும். அக்குழந்தை நான்கைந்து வருடங்களில் தனது தாய்மொழியைச் சரளமாக பேசுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்ன ஆச்சர்யம். அது எந்த இலக்கணத்தைக் கற்றுப் பேசுகிறது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏன் நாமே அவ்வாறு தானே வளர்ந்தோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆம். குழந்தை வளர வளர எந்த மொழிச் சூழலிலுள்ளதோ அம்மொழியைக் குழந்தை நன்றாகப் பேசத் தொடங்கிவிடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதே முறையைத் தான் ஆங்கிலம் சரளமாக பேசவும் நாம் பின்பற்ற வேண்டும். இலக்கணத்தை இங்கு கொண்டு வரக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலக்கணம் மொழியை ஆராய்வது. ஒரு பொருளை இன்னதென்று அறிந்த பிறகு தான் ஆராய வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கு நமது தேவையை நாம் உணர வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மொழியை ஆராய்வதா அல்லது சரளமாக பேசுவதா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரளமாக பேசுவது என்றால் இலக்கணத்தை கற்கத் தேவையில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆம். இன்று நம்மிடையே சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் பலருக்கு அதன் அடிப்படை இலக்கணம் கூட தெரியாது என்பது தான் உண்மை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகவே பள்ளிகளில், மாணவர்களை ஆங்கிலத்தில் உரையாட வைப்பது இந்த மொழிச் சூழலை உருவாக்கத்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பலர் இதிலென்ன இருக்கிறது என நினைக்கலாம் ஆனால் இந்த செயல்பாடு ஆங்கிலத்தை சரளமாகப் பேசுவதில் முக்கியப் பங்காற்றுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதனையுணர்ந்து நாம் நம்மை மொழியின் ஹாட்ஸ்பாட்டில் இணைத்து, பேசி பயன் பெறுவோமாக.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-5016026389415919102020-05-31T20:48:00.002+05:302020-05-31T21:09:05.073+05:30விடியலும்,வேலையும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br />
<br />
வணக்கம் நண்பர்களே,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்போது என் மனம் கொஞ்சம் பாரமாக இருக்கிறது.ஏனென்றால் என்னுடன் நன்றாக உரையாடிக் கொண்டிருந்த ஒரு பெண் திடீரென என்னை ப்ளாக் செய்துவிட்ட சோகம் தானது.<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மைதான்,ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவுக்கு ஏங்கும் மனிதனின் கவலையும் எனது கவலையும் ஒன்று தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தினமும் காலையில் எழும்போது அனைவரும் ஒவ்வொரு திட்டங்களோடு எழுவோம். அதுவும் இந்த அவசரகதி வாழ்க்கைச்சூழலில் பல எதிர்பார்ப்புக்கள்,ஏமாற்றங்களோடு தான் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பலரும் பல்வேறு திட்டங்களை வைத்திருப்பர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்று எனக்கென்றிருந்த திட்டம் காய்கறி சந்தைக்குச் சென்று காய்கறிகளை வாங்கி வருவது. காலை, நேரமே சென்றால் தான் காய்களை சுத்தமாக வாங்க இயலும். எனவே, சந்தைக்குப் செல்லும் போதெல்லாம் நேரமே எழுந்து சென்றுவிடுவேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் அன்று கொஞ்சம் அதிகமாக தூங்கிவிட்டேன். தூக்கத்திலிருந்த என்னை என் அம்மா வந்துதான் எழுப்பினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்போதும் நான் தூக்கத்திலிருந்தால் அம்மா அவ்வாறு எழுப்பமாட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்று ஒரு நிகழ்வு நேர்ந்திருந்தது. அந்நிகழ்வு யாதெனில்,</div>
<div style="text-align: justify;">
வீட்டுக்கு வெளியே தோட்டத்தில் ஓர் செண்பகமரமுள்ளது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அம்மரத்தின் கீழ் நிழலிருக்கும். நீர் போவதால் மண் ஈரமாக இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கு ஒரு நாய் இறந்து கிடந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதை எனக்கு அறிவுறுத்தவே என்னை அவர் எழுப்பினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் மெதுவாக எழுந்து நடந்து வெளியே வந்து மரத்தின் கீழிருக்கும் நாயைக் கண்டேன்.<br />
<br />
காலை தந்த வேலை என கைகளில் உறையணிந்து கொண்டு,முகத்திற்கு கவசமொன்று அணிந்து வெளியில் வரும்போது ஒரு சிந்தனை, ஒருவேளை அன்று கர்ணன் கவச குண்டலங்களோடு பிறந்தது போல் இப்போது பிறக்கும் குழந்தைகள் முகக்கவசத்தோடு பிறப்பார்களோ என தோன்றியது. ம்ம்ம் வேண்டாம்.<br />
<br />
மருத்துவமனையில், அவற்றையும் பிடுங்கி வியாபாரம் செய்துவிடுவார்கள் எனவும் தோன்றியது. நான் முகக்கவசமெல்லாம் அணிவதில்லை. எல்லாம் கைக்குட்டை தான். முகக்கவசமும் அதுதான் சளிக்கவசமும் அதுதான். "நின்றால் குடையாம் இருந்தால் சிங்காசணமாம் நெடு கடலில் என்றும் அணையாம்" என்பதைப் போல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாய் தூங்குவது போல் கிடந்தது. அதன் கணத்தவுடல் சேற்றில் சற்று கெட்டியாகியிருந்தது.<br />
<br />
பகவானே.. கெட்டி மேளம் கேட்க செய் என்றால் எதை எதையோ காட்டுகிறாய்.<br />
அவனும் கெட்டி காரன் தான்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் காலம் தாழ்த்த,தாழ்த்த நாயினுடல் தாங்காது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே அதை அப்புறப்படுத்த வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது வாகனத்தை வெளியே எடுத்து நிறுத்தி சாக்குப்பைகளை எடுத்துக் கொண்டு எனது மொழுக் மொழுக் உடலால் நாயை தூக்க முற்பட்டபோது என்னாலதை தூக்கவியலவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காரணம் அந்நாய் சேத்தில் கிடந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு வழியாக அதையெடுத்து எனது வாகனத்தில் கிடத்தினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாகனத்தை செலுத்தினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வழியில் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த ஆண்கள் சிலர் என்னைப் பார்த்து நகைத்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான், அவர்களில்லத்திலும் இதே போன்ற பணியை அவர்களும் செய்திருக்கக் கூடும் என்றெண்ணி ஆறுதலடைந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின் ஆட்களில்லாத பகுதியில் அந்த நாயைப் போட்டு விட்டு வந்தேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீட்டிக்கு வந்து வாகனத்தை நன்றாக கழுவி,நானும் குளித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அம்மா எனக்கு ஆவி பறக்க ப்ரூ காஃபியை நீட்டினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் திருப்தியாக கபக் கபக் என்று காஃபியைப் பருகினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனிதன் இறந்தால் என்ன மரியாதையளிக்கப் படுகிறது. தடபுடலான விருந்து, இறப்பு,வாரிசு என எத்தனை சான்றிதழ்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதுவும் அகால மரணமானால் இறந்தவரின் குடும்பம் படும் பாடு இன்னும் மோசம்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனிதவுடல் தாங்கி இப்புவியில் பிறந்த நமக்கு ஏதோ ஒருவகையில் இறைவன் நன்மையே செய்திருக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வாறு எண்ணி காலை சிற்றூண்டிக்கு தயாரானேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது அன்னை சூடான ஆப்பத்தை கொண்டைக்கடலை குளம்புடன் பரிமாறினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் ஆனந்தமாக உணவுண்ண ஆரம்பித்தேன்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
ஆறு ஆப்பங்கள் ஸ்வாஹா! அவ்வளவு அயர்ச்சியாக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-39064410608145541482020-05-29T15:58:00.001+05:302020-05-29T16:29:26.054+05:30மனமும்..சமணமும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span id="goog_2085183048"></span><a href="https://www.blogger.com/"></a><span id="goog_2085183049"></span>வணக்கம் நண்பர்களே,</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<a href="https://naveencbe.blogspot.com/2020/05/blog-post_26.html?m=1" target="_blank">நான் அதிர்ந்து போயிருந்த அக்கணம்</a> என்னுள் நிறைய ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும்.</div>
<a name='more'></a><div style="text-align: justify;">
எனது அன்னை ஒப்புதல் கடிதத்தில் கையொப்பமிட்டு என்னிடம் அளித்தார். </div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
நான் அதை பத்திரப்படுத்தி விட்டு,சிறிது நேரம் அறையிலேயே அமர்ந்தேன்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
பின், தாயின் வற்புறுத்தலின் பேரில் வீட்டிற்குக் கிளம்பினேன்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
பேருந்திலேறி சீட்டு வாங்கியமர்ந்தேன்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அந்த வயதிலேயே வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய ஓர் அறிமுகம் எனக்குக் கிடைத்தது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
நிறைய பௌத்த நூல்களின் மேல் எனது நாட்டம் செல்லவே..</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
எனது ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அதில் எனக்கு புத்தரைப் பற்றிய பாடமொன்று இருந்தது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அதை புரட்டி பார்க்கையில் , புத்தரின் போதனையைத் தொகுத்துக் கூறும் ஒரு ஆங்கில வாசகம் இருந்தது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
"Life is full of sorrows, the desire is the root cause of sorrow.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
To avoid miseries in the world,lead a virtuous life."</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
என்ற அந்த வாசகமென்னை மிகவும் கவர்ந்தது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
பின் பாட்டி காசி சென்று வாங்கி வந்த மின்தட்டில் புத்த கயா பற்றிய காட்சிகள் வந்தன. அதையடிக்கடி எனது கணினியில் கண்டு கொண்டே இருந்தேன்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
இந்த நிகழ்வுகளெல்லாம் எனது வளரிளம் காலத்தை ஆக்கிரமித்திருந்தாலும்</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
வயிற்றுக்குள் பறந்த பட்டாம்பூச்சிகளுக்கு மட்டும் குறைவேயில்லை.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
காரணம் பக்கத்து வீட்டில் புதிதாக குடி வந்த வடநாட்டுக் குடும்பம்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அந்த குடும்பத்தில் என் வயதையொத்த ஓர் சிறுமியிருந்தாள் அவள் பெயர் </div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அதிதி.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
தினமும் மாலையில், மொட்டை மாடியில் நாங்களிருவரும் பேசுவோம்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவர்களின் இல்லத்திற்கு நான் சென்ற போது அவளது தாயார் என்னை நன்றாக உபசரித்தார். </div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவர்களது பூஜையறைக்கு என்னை அதிதி அழைத்துச் சென்றாள்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவர்கள் அதை மிகவும் தூய்மையாக வைத்திருந்தனர்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அனைத்தும் வெள்ளிச் சிலைகள். தவக்கோலத்தில் ஆடைகளற்ற ஆண் சிலைகள். ஒவ்வொரு சிலைக்கும் மேலே ஒரு சிறிய குடையிருந்தது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
நான் அவர்கள் பூஜையறையில் நிற்பதை கண்ட அவளின் அம்மா அவளை தனியாக அழைத்து திட்டியிருப்பார் போல தோன்றியது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவள் வந்ததும் என்னிடம் அவள் சிரித்துக்கொண்டே என்னை அவ்விடம் விட்டு வெளியேறச் செய்தாள்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
வெளியில் வந்து நான் அந்த சிலைகளைப் பற்றி அவளிடம் கேட்டேன்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவள் மிகவும் ஆர்வத்துடன் அந்த சிலைகளைக் பற்றி எனக்கு கூறினாள்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவளுடைய அறிவு என்னை வியப்படையச் செய்தது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவள் சமண மதத்தின்</div>
<div style="text-align: justify;">
24 தீர்த்தங்கரர்களைப் பற்றி எனக்குத் கூறினாள்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவர்கள் ஞானிகளென்றும், பற்றற்றவர்கள் எனவும் கூறினாள்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
இதையெல்லாம் எனது ஒன்பதாம் வகுப்பு புத்தகத்தில் படித்ததாக நினைவு கூர்ந்தேன். </div>
</div>
<div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அதன்பின், அவ்வருடக் கோடை விடுமுறையில் எனது தாயாரின் பிறப்பிடமான விஜயமங்கலம் என்றவூருக்குச் சென்றேன்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அங்கு ஒரு கோவில் இருந்தது. அதை அப்பகுதி மக்கள் 'நெட்டை கோபுரம்' என அழைத்தனர்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அங்கு சென்றேன்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
என்ன ஆச்சர்யம்! அதிதி வீட்டில் நான் கண்ட சிலைகளைப் போலவே அங்கும் இருந்தன. அங்கிருந்த ஒரு வயதானவர் தான் கோவிலைக் திறந்து தரிசனம் செய்து வைத்தார்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
நான் ஊரிலிருந்து வந்ததும் அதிதியிடம் இவ்விஷயத்தைக் கூறினேன். அதற்கு அவள் ஒரு வரலாற்றையே எனக்கு கதை போலச் சொன்னாள். சமணர்கள் வட நாட்டிலே பரவியிருந்தாலும் பஞ்சம் காரணமாக தெற்கு நோக்கி வந்தனராம்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவ்வாறு வந்த சமணர்களைப் பாண்டிய மன்னனொருவன் ஆதரித்து அவர்கள் தங்குவதற்கு இடமலித்தானாம்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
சமணர்கள் பெரும்பாலும் துறவிகளாகயிருந்ததால் அவர்கள் குகைகளிலும் கோவில்களிலும் தஞ்சமடைந்தனராம்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவ்வாறு வாழ்ந்த சமணர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் குடிபெயர்ந்தனராம்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
தங்களது ஆழ்ந்த அறிவுக் களஞ்சியங்களை பரவச் செய்ய அப்போது இங்கிருந்த சமயங்கள் வாய்ப்பளிக்காததால் அவர்கள் பலரும் தாங்கள் வாழ்ந்த குகைகளிலும்,பாறைகளிலும் தங்கள் செய்யுட்களை எழுதினார்களாம்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நான் அவளின் அறிவைக் கண்டு வியந்தேன். அவளை காதலிக்கவும் செய்தேன். ஆனால் காலம் இப்போதும் விளையாடியது.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவள் தந்தை செய்த தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் அவர்கள் தங்கள் சொந்தவூரான ஜெய்பூருக்கே சென்றுவிட்டனர். அவளை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற எனக்கு தோல்விதான் மிஞ்சியது. அவளது தாயார் தான்</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
என்னுடன் பேசினார்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவளது தாயார் கூறினவாவது," நாங்கள் தமிழ் நாட்டை விட்டு வந்துவிட்டோம்.இனி அதிதியுடன் நீ பேசுவதற்கு என்னயிருக்கிறது.மரியாதையாக போனை வை" என திட்டிவிட்டார்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
சில நாட்களில், அதே வீட்டிற்கு வேறு யாரோ குடிவந்தனர்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
இப்போதும், அந்த வீட்டின் மொட்டை மாடியை பார்க்கும்போதெல்லாம் அதிதியின் நினைவுகள் என் கண் முன்னே நிழலாடும்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
</div>
<div>
<div style="text-align: justify;">
</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-33187080838309403532020-05-27T19:37:00.004+05:302020-05-28T08:28:15.502+05:30நுனி நாக்கில் ஆங்கிலம்!<br /><div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வணக்கம் நண்பர்களே,</div><div style="text-align: justify;"> ஆங்கிலம் நம் அனைவரின் மனதிலும் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பல தலைமுறைகளாக நம்மிடம் ஒட்டி உறவாடி கொண்டு சமுதாயத்தில் தனக்கென ஓர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.<span><a name='more'></a></span></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஒரு மொழியைப் பற்றி அறிந்து கொள்ளும் முன் அந்த மொழியைப் பேசக் கூடிய மக்களைப் பற்றியும், அவர்கள் வாழும் பகுதியைப் பற்றியும் மொழியியல் அறிஞர்கள் ஆராயத்</div><div style="text-align: justify;">தவறமாட்டார்கள் .</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஆனால் நாமோர் வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.மொழியைக் கற்பதற்கும், மொழியைப் பற்றி கற்பதற்கும் வித்தியாசமுள்ளது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> தற்போது மொழியைப் பற்றி கற்பதை விட மொழியை கற்பது மக்கள் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சரளமாக ஆங்கிலம் பேச மக்கள் மனமானது ஏங்குகிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> குறிப்பாக படித்த இளம் தலைமுறையினரிடம் இந்த தவிப்பைக் காணமுடிகிறது. அதுவும் பெண்கள், ஓர் அழகான ஆண் மகன் தங்களை கடந்து போக நேர்ந்தாலோ அல்லது அவர்களை நோட்டமிட நேர்ந்தாலோ தாய்மொழியில் பேசிக் கொண்டிருந்த அவர்கள் திடீரென ஆங்கிலத்தில் கொஞ்சுவார்கள். ஆண்களும் அப்படித்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஆஹா.. மொழி எதற்கெல்லாம் பயன்படுகிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> இது இயற்கையாக பலரிடம் உள்ள ஓர் எண்ணம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஓர் ஆங்கில ஆசிரியராக என்னை நான் வெளியுலகில் அறிமுகம் செய்தபின், " சார், சரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி?" என்னை நோக்கிப் பாயும் கேள்வி அஸ்திரங்களுள் இதுதான் முதன்மையானது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> பலரும் இந்த கேள்விக்கு தரும் வாடிக்கையான பதில்," நிறைய வாசியுங்கள் என்பதுதான். இதுவும் உண்மைதான். ஓர் மொழியில் ஆழ்ந்த புலமை பெற வாசிப்பு இன்றியமையாதவற்றுள் ஒன்றாகிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஆனால், இந்த பதிலைப் பெறுபவரின் நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் கேட்ட கேள்வி, ஆங்கில மொழியைச் சரளமாக பேசுவதைக்குக் குறித்ததாகும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஒருவேளை அந்த நபர் வாசிப்புப் பழக்கம் அல்லாதவராகக் இருக்கலாம் அல்லது நமது நாட்டிற்கே உரிய கிராமிய பின்னனியுள்ள நபராகக் கூட இருக்கலாம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> நபருக்கு நபர், ஆங்கிலம் கற்பதின் தேவையும் அதற்கேற்ற</div><div style="text-align: justify;"> அணுகுமுறையும் மாறுபடும். அனைவருக்கும் ஆங்கில இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கற்றுக் கொடுத்தால் அவர்களால் சரளமாக ஆங்கிலம் பேசும் இலக்கு அடையப்படுமா என்பதை உறுதியாகத் கூற இயலாது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> ஓர் மொழியை கற்கும் முன் அதனை அறிவு சார்ந்த பாடத்தைப் போன்று அணுகாமல் திறன் சார்ந்த பாடமாக அணுகுதல் வேண்டும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> திறன் சார்ந்த பாடங்களுக்கு எடுத்துக்காட்டாவது,</div><div style="text-align: justify;"><br /></div><ul style="text-align: left;"><li style="text-align: justify;"> ஓவியம்</li><li style="text-align: justify;">நடனம்</li><li style="text-align: justify;">நீச்சல் முதலியன.</li></ul><div><div style="text-align: justify;"> அறிவு சார்ந்த பாடங்களுக்கு எடுத்துக்காட்டாவது,</div></div><div><div style="text-align: justify;"> </div></div><div><ul style="text-align: left;"><li style="text-align: justify;">அறிவியல்</li><li style="text-align: justify;">வரலாறு</li><li style="text-align: justify;">இலக்கியம் முதலியன.</li></ul><div><div style="text-align: justify;"> மொழியைக் சரளமாக பேசக் கற்பதற்கும் இதை மனதில் கொள்வதவசியம்.</div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"> எவ்வாறு, ஓவியத்தை பயிற்சியினால் சிறப்பாக வரைய இயலுமோ அதே போல் மொழியை சரளமாக பேசுவதும் பயிற்சியினால் தான் வரும்.</div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"> சரி. அதென்ன பயிற்சி சார்?</div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"> ஓவியத்தை வரைந்து முயற்சிப்பதைப் போல, ஆங்கிலத்தை சரளமாகப் பேச, பேசி பயிற்சி செய்ய வேண்டும். </div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"> ஆங்கிலத்தில் பேச வேண்டுமா?</div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"> ஆம். ஆங்கிலத்தில் பேச வேண்டும்.</div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"> பிழையானால் அனைவரும் நகைப்பார்களே.</div></div><div><div style="text-align: justify;"> </div></div><div><div style="text-align: justify;">ஆனால் அதே நகைக்கும் நபர்கள் நீ சரளமாக ஆங்கிலம் பேசினால் விழிப்பார்களே.</div></div><div><div style="text-align: justify;"> </div></div><div><div style="text-align: justify;"> நீச்சல் கற்க கிணற்றிலோ, நீச்சல் குளத்திலோ குதிக்கத்தான் வேண்டும்.</div></div><div><div style="text-align: justify;"> அதே போல் ஆங்கிலம் சரளமாக பேச, பேசத்தான் வேண்டும்</div></div><div><div style="text-align: justify;"> ஆங்கிலத்தில் பேசுவது தான் ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான பயிற்சியே.</div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"> சரி பேசலாம். யாரிடம் பேசுவது?</div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"> அப்பாவிற்கு தமிழே தெளிவாக பேச வராது.</div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"> அம்மாவிற்கு வீட்டு வேலைகளே கதி.</div></div><div><div style="text-align: justify;"> </div></div><div><div style="text-align: justify;"> அண்ணனுக்கு தனக்கு பேச வராதே என்ற குற்றவுணர்ச்சி.</div></div><div><div style="text-align: justify;"> </div></div><div><div style="text-align: justify;">கவலையை விடுங்கள். ஆங்கில ஆசிரியரிடமே பேசலாம் என்றாலும் எனக்கு பயம்.</div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"> சரி யாரிடம் தான் பேசிப் பயிற்சி செய்வது?</div></div><div><div style="text-align: justify;"> </div></div><div><div style="text-align: justify;"> கவலையை விடுங்கள். கண்ணாடியிடம் பேசுங்கள்.</div></div><div><div style="text-align: justify;"> </div></div><div><div style="text-align: justify;"> அட முட்டாள்தனமாக இல்லை.</div></div><div><div style="text-align: justify;"> </div></div><div><div style="text-align: justify;"> இல்லை.. இது தான் ஒரே வழி. கூச்சத்தை, பயத்தைப் போக்குவதற்கு.</div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"> நம்ம வீட்டு கண்ணாடியே கற்றல் உபகரணம்.</div></div><div><div style="text-align: justify;"> </div></div><div><div style="text-align: justify;"> அய்....ஜாலி....செலவே இல்லை..</div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"> ஆம் நண்பர்களே...அனைவரும் இனி ஆங்கில மொழியை சரளமாக பேசுவோமாக. </div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div><div style="text-align: justify;"> </div></div><div><div style="text-align: justify;"><br /></div></div><div style="text-align: justify;"> </div></div><div style="text-align: justify;"> </div></div>Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-1949065683391504661.post-45817177475335935532020-05-26T15:35:00.001+05:302020-05-26T18:52:29.846+05:30ஏனுங்க கொஞ்சம் கேளுங்க....நான் கோயம்புத்தூர் ஆளுங்க...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
வணக்கம் நண்பர்களே,<br />
<br />
என்னதான் திருப்பதியில் முதுகலைக்குச் சென்றாலும் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் கோவையில் தான். கோவையைப் பற்றி தமிழுலகிற்கு நான் கூறி புரிவதற்கு ஏதுமில்லை.<br />
<a name='more'></a>அனைவரும் நன்கறிவர் கோவையின் சிறப்புக்களை. எனவே, கோவைக்கும் எனக்குமுண்டான உறவை இக்கட்டுரையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.<br />
<br />
கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படும் கோயம்புத்தூர். எனது வாழ்க்கையில் ஓர் அற்புத பரிசென்றே சொல்ல வேண்டும்.மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் என் வாழ்க்கை இந்த நொடி வரை போய்க் கொண்டிருக்கிறது.<br />
<br />
எனது தந்தை ஓர் தொழிலாளி. அவர்தம் கடின உழைப்பால் தான் நான் இன்று வரை ஆனந்தமாக வாழ்ந்து வருகிறேன். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பின் என் பெற்றோருக்கு நான் பிறந்தேன். எனது பிறப்பே ஓர் சாதனையாக அமைந்தது.<br />
<br />
திருமணமாகி பன்னிரெண்டு ஆண்டுகள் ஒரு பெண் குழந்தை பெறாமலிருந்தால் அவளை இந்த சமூகம் நிம்மதியாக வாழ விடுமா? இல்லை.<br />
<br />
என் அன்னைக்கும் அதே நிலைதான். வெளியில் செல்லவே அஞ்சுவார்களாம். அப்படி சென்றாலும் நெருங்கிய உறவினரே இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இவளுக்கு எப்படி குழந்தை பிறக்கும் எனவும் அப்படியே பிறந்தாலும் ஆரோக்கியமாக பிறக்காது என்றெல்லாம் ஏசுவார்களாம்.<br />
<br />
<br />
இதனையெல்லாம் தாங்கிக் கொண்டு இறைவனே கதியென்றிருந்த என் தாய்க்கு ஒரு தை மாதம் நான் பிறந்தேனாம்.எனது வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் துன்பமானாலும் சரி இன்பமானலும் சரி அதை நான் என் அன்னையிடம் பகிர நான் தயங்கியதில்லை.<br />
<br />
என்ன ஒரே தற்பெருமையாகவுள்ளதே என நினைக்க வேண்டாம் நண்பர்களே. உண்மையைப் பதிவு செய்துள்ளேன். பதினோரு ஆண்டுகள் எனது தந்தை படுக்கையில் கை கால் வராமல் அவதியுற்றார். ஆனால் அப்போதும் வறுமையின் நிழல் கூட என் மேல் படாமல் என் அன்னை என்னை வளர்க்கிறார்கள்.<br />
<br />
எனது நகைச்சுவையான எழுத்திற்குப் பின்னால் ஒரு பெரிய துன்பம் இருக்கிறது.<br />
<br />
எனக்குத் தற்போது அறிவுரை வழங்க தந்தையின் ஸ்தானத்தில் எவருமில்லை.<br />
<br />
பொதுவாக வாலிபத்தில் தந்தையை அனைவரும் வெறுப்பர். ஆனால் அத்தந்தை வெறுப்பையும் பொருட்படுத்தாமல் தனது அனுபவக் கல்வியை மகனுக்கு வழங்குவார்.<br />
<br />
ஒருகால் அந்த மகன் அந்த அறிவைப் பயன்படுத்தி நல் நிலையை அடைந்தால், அதற்காக அவன் தன் தந்தையை எண்ணி பெருமைப் படுவான்.<br />
<br />
எனது வாழ்க்கையின் பதினைந்தாவது வருடத்தில் எனது தந்தையின் ஸ்தாநம் மறைந்தது. அவர் படுத்த படுக்கையாகி விட்டார். அவரிடம் என்னால் எதையும் பேசயிலவில்லை.<br />
<br />
நானும் எனது தந்தையும் நண்பர்களைப் போல இருந்தோம். என்னை அவ்வளவு புரிந்து கொண்டவர் என் தந்தை. காலம் மிக கொடியது.<br />
<br />
<br />
அப்போது நான் பத்தாம் வகுப்பிலிருந்தேன்.<br />
<br />
பள்ளியில் நாமினல் ரோலில் பெற்றோர் கையொப்பம் பெற ஒப்புதல் கடிதத்தை வீட்டுக்கு கொண்டுவந்தேன்.<br />
<br />
<br />
அப்பாவை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.<br />
<br />
<br />
அம்மா அப்பாவுடன் மருத்துவமனையிலிருப்பதாக அறிந்த நான்,<br />
அன்று வீட்டில் இருந்துவிட்டு.<br />
<br />
அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை மருத்துவமனைக்கு சென்றேன்.<br />
<br />
<br />
என் தந்தையைப் பார்த்து நலம் விசாரித்து, எப்பவும் போல் பேசிவிட்டு கையொப்பத்திற்காக அவரிடம் படிவத்தை நீட்டினேன்.<br />
<br />
<br />
அப்போது எனது தந்தையின் கண்களில் கண்ணீர் வடிந்தது.<br />
<br />
<br />
தாயும் அழுது கொண்டே அப்பாவிற்கு கையும் காலும் செயல்படுவதில்லை என கதறிவிட்டார்.<br />
<br />
நான் அதிர்ந்து போனேன்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div>
Naveen Harihttp://www.blogger.com/profile/07562319219204877144noreply@blogger.com13